Monday 28 August 2017

பிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தனது ஒன்பதாவது வாரத்தையும் நிறைவு செய்துள்ளது. இந்த வாரம் வீட்டுக்குள் பெரிதாக எந்த சிக்கல்களும் இல்லாதிருப்பது கண்டு மனம் நொந்த பிக்பாஸ் கமல் மூலமாக குடும்ப உறுப்பினர்களிடையே பிளவை உண்டு பண்ணினார். குடும்ப உறுப்பினர்களின் மீதான புகார்களை வழக்காடு மன்றத்தின் மூலமாக விசாரிப்பதாக ஒரு பணியைக் கொடுத்து சிக்கல்களை சிறிது இல்லத்திற்குள் அனுப்பி விட்டார். முழுமையான விளைவுகள் திங்கள் ( 28 ) அத்தியாயம் முதல் தெரிய வரும்.


வழமையாக வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை சற்று கலக்கமடைய செய்து பிரியாவிடை வழங்கி பின்னர் தான் கமல் இருக்கும் மேடைக்கு வரவைப்பார்கள். ஆனால் ரைசாவை பிக்பாஸ் ரகசிய உரையாடல் அறைக் கதவின் மூலமாக மேடைக்கு வரவைத்து பின்னரே சக இல்ல உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தினர். இது சக போட்டியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. மேடைக்கு வந்து சிறப்பாக உரையாடலை மேற்கொண்டுவிட்டு விடைபெற்றார் ரைசா.

ரைசா கமலிடம் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட்டார். "நாம் வீட்டில் எந்தப் பொருளையும் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் வீட்டில் நம்மிடம் பணம் இருக்கும். அதனால் நினைத்ததை உடனே வாங்கிவிட முடிவதால் பணத்தையும் பொருளையும் மதிப்பதில்லை. பிக்பாஸ் வீட்டில் எந்தப் பொருளும் இலகுவில் கிடைக்காது. ஆகவே நம் உழைப்பின் அருமையையும் பொருட்களின் அருமையையும் புரிந்து கொண்டேன். இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். அதை இனி என் வாழ்வில் கடைப்பிடிப்பேன்" என்று ரைசா கூறினார்.

உண்மைதானே? மற்றைய போட்டியாளர்களில் இருந்து மாறுபட்ட புதிய பாடத்தை ரைசா பெற்றுக்கொண்டுள்ளார். நாமும் கடைப்பிடிக்கலாம் அல்லவா?

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #STARVIJAYTV #KAMALHASSAN#RAIZA #OVIYA #ENDAMOLSHINE

No comments:

Post a Comment

Popular Posts