விரிந்த வானில்
வியப்பாய் பல
ஊடலும், கூடலும்
ஓய்வின்றி நிகழ்கிறது...
வண்ணங்களை இறைத்து...
வரைமுறைகள் அற்று...
அழகாய் நடக்கிறது
ஒளிச்சேர்க்கை வானில்...
கதிரவனின் காதலும்
கரை புரண்டோட...
கதிராய்க் கொணர்ந்தான்
காதலை வெளியில்...
ஒவ்வொரு கதிரும்
ஓராயிரம் உணர்வை
கடலினுள் பிரதிபலித்து
காதலைக் கூட்டிட...
புது மணப்பெண்னாய்
பூரித்து மங்களமாய்
விடிந்தது உலகும்
வியாபித்தது ஒளியும்...
கடலன்னையும் தன்னை
கதிரொளியில் தொலைத்தாள்...
மின்னிடும் ஒளியோ
மின்சாரமாய்ப் பாய...
சூட்டில் சுகமாய்
குளிர் காய்ந்தாள்...
தன்னையே இழந்தாள்...
துள்ளிப் பறந்தாள்...
கூடலின் பரிசோ
கார்மேகமாய் வந்திட...
கருவாய்த் தாங்கி
கருமையாய்த் திரிந்தாள்...
காற்றின் வேகத்தில்
கலையாமல் நகர்ந்தாள்...
காலம் கூடிவர
மாரியாய்ப் பொழிந்தாள்...
நாளும் கூடல்
நடப்பது சாத்தியமோ?...
ஊடலும் சிலகாலம்
உண்டுதான் இருவருக்குள்ளும்...
அப்பொழுது
வெற்று வானில்
வெண்மையாய் அலைவாள்...
கருவும் இராது...
கார்மேகமும் இராது...
இருந்தும் நகர்வாள்
இன்பமாய் இவ்வானில்...
கேட்பார் யாருமில்லை...
கேள்வியும் இவள்மேலில்லை...
இதைப் பார்த்த
என்னுள் இரண்டே
கேள்விகள் பிறக்கிறது...
வேள்வித்தீயாய்ச் சுடுகிறது..
திருமணம் முடிந்தும்
தாம்பத்தியம் நடந்தும்
கருவுறாமல் இருந்தால்...
கல்லாகி மனமும்
பெண்மையை தூற்றுகிறேதே...
பாரபட்சம் பாராமல்
மலடியென்று அழைக்குதே
மதிகொண்ட மக்கள் கூட்டம்...
இருவரினுள் பூத்த
காதலும் பொய்யில்லை...
காமமும் பொய்யில்லை...
இருந்தும் பெண்மையை
குறிவைப்பது ஏனோ?
காளையனை தாங்குவதுமேனோ?
இன்றுவரை கிடைக்கவில்லை
இக்கேள்விக்கு விடை...
அடுத்த ஒன்று...
ஆசையாய் திருமணம்
அரங்கேறி மஞ்சமடையும் முன்
காலனிடம் தஞ்சமடைந்தவனுக்காக
கதியற்று நிற்பவளை
உறவினர்கள் கூடி
நிறங்களைக் கலைத்து
நிர்மூலமாக்கி நிர்க்கதியாக்குகிறார்களே
நினைவிருந்து தான் நடக்குதோ?
இல்லை
மதியிழந்து நடக்குதோ?
மணவாளனாய் வடித்தது
இவள் பிழையோ?
உறவினர் செய்தது
தான் பிழையோ?
காதலில் கரங்கோர்த்து
கரை சேரவந்தவளை
அவமானத்தின் சின்னமாய்...
அனுதாபத்தின் சின்னமாய்...
நிறுத்துவது தான்
நியாமோ?
ஊடலில் சிலநாள்
கூடலில் சிலநாள் - என
நிறமிழந்து வான் நிற்பது
மனதிற்கு வலியில்லை...
உயிர் தாங்கி...
வலி தாங்கி...
வெம்பும் பெண்மையின்
வலி தீர்ந்து
கலை பெற்று
கரு பெற்று
நிற்கும் நாளே
நிறங்கள் நிறைந்த நாள்...
மற்ற நாளெல்லாம்
நிறமிழந்த நாளே
என் வானிற்கு....
- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -
வியப்பாய் பல
ஊடலும், கூடலும்
ஓய்வின்றி நிகழ்கிறது...
வண்ணங்களை இறைத்து...
வரைமுறைகள் அற்று...
அழகாய் நடக்கிறது
ஒளிச்சேர்க்கை வானில்...
கதிரவனின் காதலும்
கரை புரண்டோட...
கதிராய்க் கொணர்ந்தான்
காதலை வெளியில்...
ஒவ்வொரு கதிரும்
ஓராயிரம் உணர்வை
கடலினுள் பிரதிபலித்து
காதலைக் கூட்டிட...
புது மணப்பெண்னாய்
பூரித்து மங்களமாய்
விடிந்தது உலகும்
வியாபித்தது ஒளியும்...
கடலன்னையும் தன்னை
கதிரொளியில் தொலைத்தாள்...
மின்னிடும் ஒளியோ
மின்சாரமாய்ப் பாய...
சூட்டில் சுகமாய்
குளிர் காய்ந்தாள்...
தன்னையே இழந்தாள்...
துள்ளிப் பறந்தாள்...
கூடலின் பரிசோ
கார்மேகமாய் வந்திட...
கருவாய்த் தாங்கி
கருமையாய்த் திரிந்தாள்...
காற்றின் வேகத்தில்
கலையாமல் நகர்ந்தாள்...
காலம் கூடிவர
மாரியாய்ப் பொழிந்தாள்...
நாளும் கூடல்
நடப்பது சாத்தியமோ?...
ஊடலும் சிலகாலம்
உண்டுதான் இருவருக்குள்ளும்...
அப்பொழுது
வெற்று வானில்
வெண்மையாய் அலைவாள்...
கருவும் இராது...
கார்மேகமும் இராது...
இருந்தும் நகர்வாள்
இன்பமாய் இவ்வானில்...
கேட்பார் யாருமில்லை...
கேள்வியும் இவள்மேலில்லை...
இதைப் பார்த்த
என்னுள் இரண்டே
கேள்விகள் பிறக்கிறது...
வேள்வித்தீயாய்ச் சுடுகிறது..
திருமணம் முடிந்தும்
தாம்பத்தியம் நடந்தும்
கருவுறாமல் இருந்தால்...
கல்லாகி மனமும்
பெண்மையை தூற்றுகிறேதே...
பாரபட்சம் பாராமல்
மலடியென்று அழைக்குதே
மதிகொண்ட மக்கள் கூட்டம்...
இருவரினுள் பூத்த
காதலும் பொய்யில்லை...
காமமும் பொய்யில்லை...
இருந்தும் பெண்மையை
குறிவைப்பது ஏனோ?
காளையனை தாங்குவதுமேனோ?
இன்றுவரை கிடைக்கவில்லை
இக்கேள்விக்கு விடை...
அடுத்த ஒன்று...
ஆசையாய் திருமணம்
அரங்கேறி மஞ்சமடையும் முன்
காலனிடம் தஞ்சமடைந்தவனுக்காக
கதியற்று நிற்பவளை
உறவினர்கள் கூடி
நிறங்களைக் கலைத்து
நிர்மூலமாக்கி நிர்க்கதியாக்குகிறார்களே
நினைவிருந்து தான் நடக்குதோ?
இல்லை
மதியிழந்து நடக்குதோ?
மணவாளனாய் வடித்தது
இவள் பிழையோ?
உறவினர் செய்தது
தான் பிழையோ?
காதலில் கரங்கோர்த்து
கரை சேரவந்தவளை
அவமானத்தின் சின்னமாய்...
அனுதாபத்தின் சின்னமாய்...
நிறுத்துவது தான்
நியாமோ?
ஊடலில் சிலநாள்
கூடலில் சிலநாள் - என
நிறமிழந்து வான் நிற்பது
மனதிற்கு வலியில்லை...
உயிர் தாங்கி...
வலி தாங்கி...
வெம்பும் பெண்மையின்
வலி தீர்ந்து
கலை பெற்று
கரு பெற்று
நிற்கும் நாளே
நிறங்கள் நிறைந்த நாள்...
மற்ற நாளெல்லாம்
நிறமிழந்த நாளே
என் வானிற்கு....
- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -
No comments:
Post a Comment