Saturday 12 August 2017

குறளமுதம் : ஒரு வரியில் குறள் விளக்கம்! அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து!

 

 

அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து


குறள் 01


அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு

ஒருவரி குறள் விளக்கம் :

அகரம் பார்த்திபன் :  அ.. ஆண்டவன் இரண்டும் முதலே...

பாலாஜி ஐயா : அகரம் எழுத்துக்கும் ஆண்டவன் உலகுக்கும் தொடக்கம்.

‪கவின்மொழிவர்மன் : அகரத்தின் தொடக்கமே பெற்றவர்கள்!

கவின்மொழிவர்மன் : முதலும் முடிவும் பெற்றோரே உலகு!

முனீஸ்வரன் : தமிழிற்கு அகரம் (முக்கியம்) தலைமைக்கு அவன் ஆதி (முக்கியம்).

பாலாஜி ஐயா : தமிழுக்கு அகரம் ஆதி ; தரணிக்கு அவனே ஆதி

முனீஸ்வரன் : தமிழிற்கு அ , தலைமைக்கு ஆதி.

‪கவின்மொழிவர்மன் : தமிழுக்கும், தலைமைக்கும்  அகரமே ஆதி!

பாலாஜி ஐயா : தலைமைக்கு  ஆதியே அகரம்! தமிழுக்கு  அகரமே ஆதி!

ரவிசங்கர் பத்மநாதன் : அகராதி உடையவளே அனைத்திற்கும் தொடக்கம்.
(அகரம்+ஆதி+உடையவள்.)

முத்துகிருஷ்ணன் : பெற்றோரே எல்லோர் பிறப்பிற்கும் முன்.

சிகரம் பாரதி : மொழிகளின் சிகரம் 'அ'கரம். அகரத்தின் சிகரம் ஆதி சிவன்!

சிவரஞ்சனி : உலகிற்கு இறைவன் முதன்மையாக இருப்பதைப் போல எழுத்துக்கு முதன்மை 'அ'கரம்.

ஜெயபிரகாஷ் : "அ"கரமும்  ஆதியும் உலகிற்கு முதன்மையானவர்கள்



குறள் 02

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

ஒருவரி குறள் விளக்கம் :

சிவரஞ்சனி : மூத்தோர்களைப் பணியாத ஒருவன்  எவ்வளவு கற்றவனாக இருந்தாலும் அந்தக் கல்வியினால் பயனில்லை

ரவிசங்கர் பத்மநாதன் : கலம் கரைசேர கலங்கரையை கலப்பவனே கலபதி.

முனீஸ்வரன் : கற்றோரை மதி என்பதை கல்.

சிவதேவன் : மதியுள்ளோரை மதிக்காதவன் கற்றும் வீண்.

விஜயா : சான்றோரை மதிக்காதவன் சான்றிதழ் பெற்றும் வீண்.

பாலாஜி ஐயா : அடக்கமே அறிவு. பணிவின்றேல் பயனற்றது கல்வி.

பாலாஜி ஐயா : அடக்கமற்ற கல்வி அமைந்தென்ன பயன்?

கிருத்திகா : பணிவற்ற கல்வி வீண்

ரவிசங்கர் பத்மநாதன் ‬: பணிவும் கல்வியும் முடிவில் கீர்த்தியில்.

கவின்மொழிவர்மன் ‬ : ஞானியானாலும் அறிஞர்களிடம் பணிவு வேண்டும்

‪கவின்மொழிவர்மன் ‬: மேதையெனினும் பெரியோர்களை மதி

சிகரம் : பணிவுடையாரின் கல்வியே வாழ்க்கைக்கு பயன் தருவதாகும். மற்றதெல்லாம் ஏட்டுக்கல்வி மட்டுமே!

குறள் 03


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

ஒருவரி குறள் விளக்கம் :

‪ரவிசங்கர் பத்மநாதன் : மலர் மனம் உறையும் இறையை உறைவோர் இறப்பதில்லை..

ஜெயபிரகாஷ் : மலர் மனம் போல் புகழுடையோர் உடலளவில் இறந்தாலும் மனதளவில் உலகம் உள்ளவரை வாழ்வார்

விஜயா  : கடவுளை நம்பினோர் கை  விடப்படமாட்டார்

சதீஷ் விவேகா ‬: அன்பு கொண்ட நெஞ்சத்தார் இறந்தும் வாழ்வார்கள்.

சதீஷ் விவேகா‬ : அன்பே சிவமாய் இறைவன் பாதம் பணிந்தோர் இறந்தும் வாழ்வார்கள்

மனோ நிலவன் ‬: அகமே சிவம் என உணர்ந்தோர்க்கு அழிவு இல்லை

ஜெயபிரகாஷ் : மலர்மிசையுடையோர் நிலமிசை நீடு வாழ்வார்

சிவதேவன் : வையத்தில் புகழோடு வாழ சான்றோரை பின்தொடர்

‪கவின்மொழிவர்மன் : மலர்மனம் பற்று, புகழ் சிறக்கும் முடிவற்று.

முனீஸ்வரன் : அன்பே இறை, உணர்ந்தவர் நீடு வாழ்வர்

குறள் 04


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

ஒருவரி குறள் விளக்கம் :

சிவதேவன் : தன்னலமின்றி வாழ்வோர்க்கு துன்பம் வரா

விஜயா  : சுயநலமற்றவர் சுகமாய் வாழ்வார்

 ‪சிகரம் பாரதி ‬: அன்புடையாரை பின்பற்றுதலே வாழ்வின் அறமாகும்.

முனீஸ்வரன் : பற்றற்றவனை பணிந்தால் துன்பம் இல்லை.

‪சதீஷ் விவேகா‬ : தன்னலம் அற்றவனுக்கு துன்பம் இல்லை

சதீஷ் விவேகா‬ : சுயநலம் அற்றவன் சுகமாய் வாழ்வான்

கார்த்திக் : விருப்பு வெறுப்பு அறுப்பின் துன்பம் இல்லை வாழ்வில்.

பாலாஜி : பற்றற்றானைப் பற்றினால் பாடுகள் இல்லை !

ஜெயபிரகாஷ் : உலகை உணர்ந்தவர் கோபப்படமாட்டார். தன்னை உணர்ந்தவர் துன்பப்படமாட்டார்.

கவின்மொழிவர்மன் : பிறர்நலம் பேணு, துன்பப்பிணி தொடரா!



குறள் 05


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

ஒருவரி குறள் விளக்கம் :

‪சதீஷ் விவேகா ‬: கடவுளை அறிந்தவனுக்கு மகிழ்ச்சி சோகம் இரண்டும் ஒன்றே

‪சதீஷ் விவேகா ‬: அனைத்தும் அவனென்று உணர எப்பிணியும் அண்டா

மனோ நிலவன் ‬: இறைப்பற்று இருக்க இதர பற்று இல

‪கார்த்திகேயன் ரமணி ‬: இறை அறிந்தோரை இருவினையும் தீண்டா.

கவின்மொழிவர்மன் : வீடுபேறு விரும்பின் இருவினை தீண்டா!

சிகரம் பாரதி : அன்புடையாரை எவ்வினையும் அண்டாது!

முனீஸ்வரன் :  இருவினை விலக இறை நிலை உணர்

குறள் 06


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

ஒருவரி குறள் விளக்கம் :

சிகரம் பாரதி : ஐம்பொறி அடக்கினால் நீடூழி வாழ்வாய்!

கிருத்திகா : இறையொழுக்கம் தவறாதிருப்பின் நல்வாழ்வது நிலைபெறும்

பாலாஜி ஐயா : இறைபுகழ் பாடு இருவினை ஓட்டு!

பாலாஜி ஐயா : ஆசையவித்தவன் அறவழிநிற்க!

முனீஸ்வரன்:  ஐம்புலன் அடக்க மக்கள் அகத்தினில் வாழலாம்.

குறள் 07


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

ஒருவரி குறள் விளக்கம் :

கவின்மொழிவர்மன் : இறைவனடியே மனக்கவலை தீர்க்கும் மருந்து.

மனோநிலவன் : கடவுளின் காலடி பற்றின் கவலைகள் இல

கார்த்திகேயன் : மனக்கவலை அறுக்க மாசற்றார் தாள் சேர்தல் நலம்.

முனீஸ்வரன் : இணையற்ற சான்றோரை பின்பற்றின் இல்லை கவலை

பாலாஜி ஐயா : இணையற்றோன் தாள் நினைந்து இகத்தினை மற !

குறள் 08


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

 ஒருவரி குறள் விளக்கம் :


கவின்மொழிவர்மன் : பிறவாமை வேண்டின் இறையின் தாழ் பணி!

கிருத்திகா : முக்தி பெற ஐயடி சேர்

பாலாஜி ஐயா : அறக்கடலாம் இறைதுணையில் பிற கடலைத் தாண்டு!

ரவிசங்கர் பத்மநாதன் : அறக்கடல் அருளிருந்தால் கடற்கோளில் கூட நீச்சல் போடலாம்.

பவானி : இறையடி பற்றினால் எக்கடலும் கடக்கலாம்

முனீஸ்வரன் : பெரியோரை பணிந்தால் பயனுறும் பிறவிப் பயணம்





குறள் 09


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

ஒருவரி குறள் விளக்கம் :

கார்த்திகேயன் : ஆதியை வணங்கானுக்கு ஐம்பொறி இருந்தும் பலன் இல்லா நிலை.

முனீஸ்வரன் : எண்குண சான்றோரை வணங்கா நிலை சவமே.

‪ரவிசங்கர் பத்மநாதன் : பொறிகளும் பொய்த்தது போல் தான் படைத்தவனை பணியா விட்டால்.

பாலாஜி ஐயா : தலையே நீ வணங்கு    தன்மைக ளற்றானை !

                               தன்மைகளற்றானைத் தலைவணங்கு!

கிருத்திகா : வாழ்வு பயனுற இறைதாள் பணி

சதீஷ் விவேகா : கடவுளை வணங்காமுடி இருந்தும் பயனில்லை

கவின்மொழிவர்மன் : எண்குணத்தானை வணங்காத்தலை வீண்!

சிகரம் பாரதி : ஐம்பொறிகளும் இணைந்து ஆற்றும் எட்டு குணங்களையும் பெறாதவனுக்கு ஐம்பொறிகளும் இல்லாதிருப்பதே மேல்!

குறள் 10


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

ஒருவரி குறள் விளக்கம் :

கவின்மொழிவர்மன் : இறையடி பணிபவர் வீடுபேறு அடைவர்!

பாலாஜி ஐயா : பேராளன் தாள்நினைந்து பிறவித் தளை நீக்கு!

மனோநிலவன் : பிறவி வேண்டாவெனில் இறையை வேண்டு.

கிருத்திகா : இறையை பணிந்தே பிறவியறுப்பாயே.

கவின்மொழிவர்மன் : பிறப்பறுக்க இறையடி சேர்!⁠⁠⁠⁠


//இத்தொகுப்பு தமிழ்கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவின் முயற்சியாகும். தமிழ் கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவுக்காக தொகுத்தளித்தவர் தோழர் முனீஸ்வரன் அவர்கள்.//

No comments:

Post a Comment

Popular Posts