உணவும் உடுக்கையும் இழந்த உழவனின்
இடுக்கண் களைவ தாரிங்கே ?
உண்பதோர் நாழி அளப்பதற் காளில்லை!
உடுக்கும் நாலுமுழம்
கிடைக்க வழியில்லை!
மயிர்போயின் வாழாக்
கவரிமான் போலிங்கு
வாழ்ந்தும் ஆயிற்று!
காற்றுக்கு-
சுவாசிக்கும் காற்றுக்கும்
விலை கேட்கும் காலம்வரும் !
வீதியில் விழுந்து
புரண் டலையும் நேரம் வரும்!
பிச்சையோ நாம் கேட்கின்றோம்?
பிழைக்க வழி யாமறிவோம் !
பிழைத்தும்மைப் பேணவும் யாமறிவோம்!
விழுந்துலகைக் காக்கின்ற
மழைத்துளியை வீணாக்கி விடவேண்டாம்!
விவசாயம் செய்வதற்கு வகை செய்தால்
அதுபோதும்!
வீதிவரை வரும் தென்றல்
வீட்டினுள்ளும் நுழைந்தெம்மை
நலன் விசாரிக்கும் நாள்தோறும் !
விவசாயம் செழித்திடவே வகை செய்து தாரும் !
விவேகம் அதுவே! விளக்கமும் அதுவேதான்!
சுழன்றும் ஏர்ப் பின்னதே உலகென்பார்!
சுழன் றுழன்று கொண்டேதா
னிருக்கின்றானுழவன் ஒவ்வொரு வனு மிங்கே !
உணவின்றி நாட்டின் உழவன் மரிப்பதுவோ!
உணவை அளிக்கின்ற அவனன்றோ உலகின் மூத்தகுடி !
உணர்வீர் அவன் பெருமை! உணவின்றி
அவன்மரித்தால் உலகே மரிப்பதுபோல் !
அன்னை மனம் நொந்தால்
அவர்மக்கள் வாழ்வாரோ வளம்பெற்று ?
--கி.பாலாஜி
10.04.2017
மாலை 4.15
இடுக்கண் களைவ தாரிங்கே ?
உண்பதோர் நாழி அளப்பதற் காளில்லை!
உடுக்கும் நாலுமுழம்
கிடைக்க வழியில்லை!
மயிர்போயின் வாழாக்
கவரிமான் போலிங்கு
வாழ்ந்தும் ஆயிற்று!
காற்றுக்கு-
சுவாசிக்கும் காற்றுக்கும்
விலை கேட்கும் காலம்வரும் !
வீதியில் விழுந்து
புரண் டலையும் நேரம் வரும்!
பிச்சையோ நாம் கேட்கின்றோம்?
பிழைக்க வழி யாமறிவோம் !
பிழைத்தும்மைப் பேணவும் யாமறிவோம்!
விழுந்துலகைக் காக்கின்ற
மழைத்துளியை வீணாக்கி விடவேண்டாம்!
விவசாயம் செய்வதற்கு வகை செய்தால்
அதுபோதும்!
வீதிவரை வரும் தென்றல்
வீட்டினுள்ளும் நுழைந்தெம்மை
நலன் விசாரிக்கும் நாள்தோறும் !
விவசாயம் செழித்திடவே வகை செய்து தாரும் !
விவேகம் அதுவே! விளக்கமும் அதுவேதான்!
சுழன்றும் ஏர்ப் பின்னதே உலகென்பார்!
சுழன் றுழன்று கொண்டேதா
னிருக்கின்றானுழவன் ஒவ்வொரு வனு மிங்கே !
உணவின்றி நாட்டின் உழவன் மரிப்பதுவோ!
உணவை அளிக்கின்ற அவனன்றோ உலகின் மூத்தகுடி !
உணர்வீர் அவன் பெருமை! உணவின்றி
அவன்மரித்தால் உலகே மரிப்பதுபோல் !
அன்னை மனம் நொந்தால்
அவர்மக்கள் வாழ்வாரோ வளம்பெற்று ?
--கி.பாலாஜி
10.04.2017
மாலை 4.15
அருமையான கவிதை
ReplyDelete