அ ன்பான அம்மா வேண்டும்,
ஆ சையான அப்பா வேண்டும்,
இ னிமையான உறவு வேண்டும்,
ஈ கை செய்யும்நல் நெஞ்சம்
வேண்டும்,
உ ரிமை கொண்டாட சகோதரி
வேண்டும்,
ஊ டலிலும் காதல்கொண்ட
மனைவி வேண்டும்,
எ ண்ணமொத்த நட்பு வேண்டும்,
ஏ ற்றம் நிறைந்த வாழ்வு வேண்டும்,
ஐ யம் தீர்க்கும் ஆசான் வேண்டும்,
ஒ வவொருநாளும் எதிர்த்துவாழ
எதிரியும் வேண்டும்,
ஓ ய்வு இல்லாமல் உழைத்திட
வேண்டும்,
ஔ வை வழி நடந்திடல் வேண்டும்,
அ ஃ தில்லையேல் இவ்வுலக பிரிவு
வேண்டும்.....
- இப்படைப்பு கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -
No comments:
Post a Comment