Sunday 6 August 2017

நட்பு

புதுவிதமான எண்ணங்கள்
பலவித சிந்தனைகள்
பல முரண்கள்
பற்றியிருக்கும் புள்ளி நட்பு

அழுகையில் தொடங்கும்
ஆரம்பப் பள்ளி நட்பு
கள்ளங்கபடங்கள் இல்லாத
கவிதை போன்றது
இந்த நட்பு

பாலினம் உணராத
பால்யகால  நட்பு
காதல் உருவாகும்
கல்லூரிக் கால நட்பு



காலம் கடந்தும்
கலையாத நட்பு
நுனிப் புல்லாய்
நிறம் மாறும் சில நட்பு

ஆணிவேராய் நம்முள்
பதிந்திட்ட நட்பு
அந்தரங்கம் பகிரும்
ஆழ்கடல் சங்காய் நட்பு

திசைமாறி திரியும்பொழுது
கலங்கரைவிளக்காகும் நட்பு
முகநூல்  இணைக்கும்
முகமறியா நட்பு

வரைமுறைகள் இல்லாமல்
வட்டத்திற்குள் சிக்காத
அன்பான ஆழமான நட்பு

அனைத்துமற்று நிற்கையில்
அன்னையாய் தோள்
கொடுக்கும் நட்பு

தன் திறனை
நமக்கு உணர்த்தும்
குருவாய் நட்பு

நட்பு இதுவே
நம்மை நமக்குணர்த்தும்
நிகழ்காலக் கண்ணாடி

 
 இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன் நண்பர்கள் தின சிறப்புக் கவிதையை உங்களுக்கு வழங்கியவர் கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠!

No comments:

Post a Comment

Popular Posts