Sunday 27 August 2017

குறள்வெண்செந்துறை - மொழி

தமிழும் தாயும் தரணியில் முதலாம்
அமிழ்தை போலே அவனியில் இனிதே!

அமிழ்தே உயிரே அழகிய மொழியே,
தமிழே உணர்வே தரணியில் உயர்வே!

சுவைநறுங் கரும்பே சுந்தர தமிழே,
அவைதனில் நிறைந்த அழகிய மொழியே!



தேனே சுளையே தேன்சொரி மலரே,
மானே மயிலே மாதவ மொழியே!

அகமே புறமே அலர்வடி வழகே
சுகமே சுனையே சுவைமிகும் கனியே!

தவமே வரமே தண்டமிழ் மொழியே,
குவளை மலரென குளிருநல் இதழே!

மானிறு விழியோ மாதவ மொழியோ,
காணிரு வடிவோ காரிருளின் ஒளியே


- இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^⁠⁠⁠⁠

No comments:

Post a Comment

Popular Posts