Monday 19 June 2017

கொடும்பாவி!

சிந்தைக்கு
இனியனன்!

செந்தமிழ்
மொழியினன்!

படைப்புகளின்
பரமனவன்!

ஏழைகளின்
பாமரனவன்!

எளிமையின்
மாற்றுருவினன்!

புலமையில்
வித்தகமனவன்!

ஒன்றையும்
விடுத்தனவன்!

உலகையே
உரைத்தனன்!

எனக்கோ!

பாவிகளில் அவன்
கொடும்பாவி!

பார்புகழும்
மேதாவி!

நான்படைக்க
வரியொன்றையும்
விட்டவனில்லை!

அவனின் வரியன்றி
தமிழதனில்
கற்றவனில்லை!

ஆதியிலே
மலர்ந்திட்ட
ஆதவன் நீ!

ஆண்களே
மயங்கிடும்
ஆரனங்கு நீ!

அகிலமே
முழங்கிடும்
என் பாரத தீ!

என்றென்றும்
நான்
போ(தூ)றறும்
பார தீ!!!_,_

கவின்மொழிவர்மன்…..

இது கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களால் எழுதப்பட்டு 'மின்னல் கீற்றுகள்' வலைத்தளத்தில் 17.04.2017 அன்று வெளியிடப்பட்ட படைப்பாகும்!

No comments:

Post a Comment

Popular Posts