ரோஜா படத்தில் காதல் ரோஜாவே பாடலை அம்மா பாடலாக மாற்றி எழுதும் போட்டியில் கலந்து அதில் வைரமுத்து அவர்களின் மகன் கபிலன் வைரமுத்து கையொப்பம் இட்ட சான்றிதழை பெற்றேன்.. அப்பாடலை கீழே பதிந்துள்ளேன்
தாயே... யென்தாயே...
கண்ணிமையாய் காத்தாயே...
தனிமையிலே தவிக்கவிட்டு சென்றாயே...
அகமுழுதும் நீயே அழ வைத்தாய் தாயே
தனிமையிலே நானே தவிக்கின்றேன் தாயே
மெய்யின்றுதான் பொய்யாகுமா தாயே
( தாயே)
சரணம்1
உந்தன் சொந்தம் போலவே வேறு சொந்தம் இல்லையே
உந்தன் வார்த்தை போலவே வேறு வேதம் இல்லையே
உந்தன் பாதம் போலவே சொர்க்கம் வேறு இல்லையே
நீயில்லாத வாழ்க்கையில் நானும்
கலங்கி நிற்கிறேன்
வாழ்க்கையென்ன வாழ்க்கை தேவையுந்தன் தாய்மை
நீயில்லாமல் நானும் வாழத் தேவையில்லை
புல்லொன்று தான் புயல் தாங்குமா தாயே
சரணம்2
நீ கடந்த பாதையை எந்தன் கண்கள் தேடுதே
நீ பதித்த முத்தத்தை மீண்டும் கன்னம் கேட்குதே
நீ கொடுத்த மூச்சிலே நானுமிங்கு வாழ்கிறேன்
சிதையிலெரியும் தீயென வெந்து நானும் சாகிறேன்
நிலவுயில்லா வானை பூமி
பார்த்தில்லை
நீயில்லாத பூமி எனக்கு தேவையில்லை
கண்ணீரிலே கரை சேர்கிறேன் நானே..
இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்.
தாயே... யென்தாயே...
கண்ணிமையாய் காத்தாயே...
தனிமையிலே தவிக்கவிட்டு சென்றாயே...
அகமுழுதும் நீயே அழ வைத்தாய் தாயே
தனிமையிலே நானே தவிக்கின்றேன் தாயே
மெய்யின்றுதான் பொய்யாகுமா தாயே
( தாயே)
சரணம்1
உந்தன் சொந்தம் போலவே வேறு சொந்தம் இல்லையே
உந்தன் வார்த்தை போலவே வேறு வேதம் இல்லையே
உந்தன் பாதம் போலவே சொர்க்கம் வேறு இல்லையே
நீயில்லாத வாழ்க்கையில் நானும்
கலங்கி நிற்கிறேன்
வாழ்க்கையென்ன வாழ்க்கை தேவையுந்தன் தாய்மை
நீயில்லாமல் நானும் வாழத் தேவையில்லை
புல்லொன்று தான் புயல் தாங்குமா தாயே
சரணம்2
நீ கடந்த பாதையை எந்தன் கண்கள் தேடுதே
நீ பதித்த முத்தத்தை மீண்டும் கன்னம் கேட்குதே
நீ கொடுத்த மூச்சிலே நானுமிங்கு வாழ்கிறேன்
சிதையிலெரியும் தீயென வெந்து நானும் சாகிறேன்
நிலவுயில்லா வானை பூமி
பார்த்தில்லை
நீயில்லாத பூமி எனக்கு தேவையில்லை
கண்ணீரிலே கரை சேர்கிறேன் நானே..
இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்.
அருமை! அருமை! உணர்ச்சிகளை பாங்கும் வரிகள்! வாழ்த்துக்கள் நண்பர் சதீஷ் விவேகா !
ReplyDelete