Showing posts with label முனீஸ்வரன். Show all posts
Showing posts with label முனீஸ்வரன். Show all posts

Sunday, 17 December 2017

பேருவகை கொள் மனமே

பேருவகை கொள் மனமே 
பேருவகை கொள்....
அன்பின் அறிவின் மொழியாம்
தமிழின் மேல்...

போற்றுதல் கொள் மனமே
போற்றுதல் கொள்...
தமிழை போற்றிக் கொள்ள
வாய்ப்பை பெற்றதற்கு...



புரிதல் கொள் மனமே
புரிதல் கொள்....
பகைக்கும் பகடை உருட்டும்
படைக்கும்....

தேறுதல் கொள் மனமே
தேறுதல் கொள்....
தமிழினி மெல்ல
சாகுபடியாகும் - என
தேறுதல் கொள்....

கவிஞர் முனீஸ்வரன்
                    17/11/17

பேருவகை கொள் மனமே  - கவிதை 

#கவிதை #முனீஸ்வரன்

Sunday, 2 July 2017

உணர்வுகள்

தனிமை எப்போதும் என்னை சுடுவதில்லை....

என்
குழந்தைகள் என்னோடு இல்லை
என்பதை மட்டும் உணர்த்தி செல்லும்
அவ்வளவு தான்....

அது  உலைகலத்தின்
கொதிநிலையை விட சூடானது

இலைத்துளிர்ப்பு
இலைஉதிர்ப்பு
மரமென
நாம்...



துளிர்ப்பை உணராமல்
உதிர்ப்பை மட்டுமே
உணர்வதால் வந்தநிலை

பருவநிலை மாறுதல்
மாற்றம்காணா
மரமில்லை
மரங்கள்போல
மனதில்லை...

மனமொன்றும் மரமில்லை,
இவ்வுதிர்காலம் போயின்
வரும் வசந்ததிற்காக காத்திருக்க


இது கவியா தெரியவில்லை
ஆனால் உணர்வுகளின் சங்கமம்⁠⁠⁠⁠

 இது கவிஞர்கள் அகரம் பார்த்திபன் மற்றும் முனீஸ்வரன் ஆகியோரின் படைப்பாகும்.

Wednesday, 26 April 2017

உழவு!

அவிழ்ந்தது

உழவனின் உடையல்ல-நம்
அனைவரின் ஆடை...

நிர்வாணமாய்

நின்றது நிலக்கிழானல்ல
நீயும் நானும்...

பட்டினிப்போர்

படோபமாய் வாழ்வதற்கல்ல-நம்
பிள்ளைகள் பட்டினி போக்கிட.

அவன்

குடல் பசி பொறுப்பது-வரும்
குலம் பசியின்றி வாழ்ந்திட

கேட்பது

யாசகமும் அல்ல-நிற்பது
யாசகனும் அல்ல,

அரசே
குடிகாப்பதுன் கடமை-அவன்
கும்பி கொதித்தால் அதில்-நீ
தீய்வது உண்மை

மக்களே

விளைநிலங்களை - நாம்
விலைநிலங்களாய் பார்த்தால் வந்த நிலை- அவனுக்கு...

இனி

காய்கனிகளை கடைத்தெருவில் தேடாதே
குடியானவன் குடிசையில்  தேடு.

அவன்
பிள்ளைக்கு -அவனே
பெயர்வைக்கட்டும்

அவன்
விளைச்சலுக்கு -அவனே
விலை வைக்கட்டும்!

இக்கவிதை கவிஞர் முனீஸ்வரன் அவர்களின் படைப்பாகும்!

Popular Posts