Showing posts with label சிகரத்துடன் சில நிமிடங்கள். Show all posts
Showing posts with label சிகரத்துடன் சில நிமிடங்கள். Show all posts

Friday, 29 June 2018

சிகரத்துடன் சில நிமிடங்கள் - மாரிராஜன்

சிகரத்துடன் சில நிமிடங்கள்:
பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!


கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு சராசரி கலை இலக்கிய ரசிகன். வரலாறு விரும்பி... கொஞ்சம் ஆர்வக்கோளாறு...

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?

நம்மை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?

ஆரோக்கியமாக இல்லை. சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறப்பு. மருத்துவர்கள் மாறுவதால் தீர்வுகிட்டாது. மருத்துவர்களாய் மாறினால் தீர்வு கிட்டும். 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?

சமூக பண்பாடு, அதன் கலாச்சாரம் இவற்றை தக்கவைப்பதில் மொழியின் பங்கு அளப்பரியது.

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?

வருத்தங்களை தேடிச்சென்று சம்பாதிக்காமல் இருக்க வேண்டும்.



கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?

நமது பாரம்பரிய வரலாற்றை அறிந்திருந்தால் இன்னும் செம்மையான வாழ்க்கை வாழ்ந்திருப்போம். கடந்த கால தொடர்ச்சிதானே எதிர்காலம்? பாட்டனின் வித்தையை தெரிந்த பேரன் பாக்கியவான்.

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா?

கணினி மயமாகிவரும் சூழ்நிலையால்தான் புத்தக வாசிப்பு அதிகமாகியுள்ளது. வந்து குவியும் புத்தகங்களும், விற்றுத்தீரும் நிகழ்வுகளும் இதற்கு சான்று.

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா?

விடத்தை தவிர்த்துவிட்டு அமுதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு தவம் செய்யாமல் கிடைத்த வரம்.

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?

பட்டியல் பெரியது.பாகுபாடு பார்க்க விருப்பம் இல்லை.

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்?

நமது மொழியில் பேசவேண்டும். எழுதவும் வேண்டும். பேசவைக்கவும் வேண்டும். எழுத வைக்கவும் வேண்டும். 

-சிகரம் 

#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #மாரிராஜன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Maariraajan #Interview #Q&A #SIGARAMCO #சிகரம் 

தொடர்புடைய பதிவுகள் : 

#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Thanga_Velmurugan #Interview #Q&A 
#SIGARAM #சிகரம்

#110/2018/SIGARAMCO 
2018/06/29 
சிகரத்துடன் சில நிமிடங்கள் - மாரிராஜன்   
https://www.sigaram.co/preview.php?n_id=336&code=sJIKfSpV
பதிவர் : மாரிராஜன்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #மாரிராஜன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Maariraajan #Interview #Q&A #SIGARAMCO
#சிகரம்

Thursday, 28 June 2018

சிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்

சிகரத்துடன் சில நிமிடங்கள்: 

பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

பெயர் : தங்க வேல்முருகன் 
ஊர் : விருத்தாசலம் அருகில், திருமுட்டம் வட்டம், மருங்கூர் கிராமம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. 
படிப்பு : தமிழில் எம்.ஏ, எம்ஃபில்.
வேலை : சிங்கப்பூரில் 
படைப்பு : சமீபத்தில் வெளியிட்ட 'நினைப்பதற்கு நேரமில்லை' கவிதை நூல்.

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

நல்ல படைப்பு சமூக விழிப்புணர்வு முன்னேற்றத்தைப் பற்றியே இருக்க வேண்டும். 

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? 

விழிப்புணர்வு தேவை 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? 

மொழிதான் குழந்தைக்குத் தாய் போன்றது. 

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

யாரையும் பிடிக்கவில்லை என்று ஒதுக்கக் கூடாது. மற்றவருக்கு உதவிக் கொண்டே மகிழ்வுப்படுத்த வேண்டும். 



கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேணடுமா? 

கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும், எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். 

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 

அழியாது. புத்தக வாசிப்பைத் தூண்டுமளவுக்கு எழுத வேண்டும். மேலும் கணினியும் ஓர் காப்பகம் தானே?

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 

எடுத்துக் கொள்கின்ற மனநிலையைப் பொறுத்தது. 

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்? 

அறிவுமதி, கரிகாலன், இமயம், கண்மணி குணசேகரன், இரத்தின புகழேந்தி. 

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 

நமக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும். படிக்கவும் படைக்கவும் தூண்ட வேண்டும். 

-சிகரம் 

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Thanga_Velmurugan #Interview #Q&A #SIGARAM #சிகரம் 

#108/2018/SIGARAMCO 
2018/06/28 
சிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்  
https://www.sigaram.co/preview.php?n_id=334&code=TIRVZDxY  
பதிவர் : தங்க. வேல்முருகன்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Thanga_Velmurugan #Interview #Q&A #SIGARAM 
#சிகரம்

Popular Posts