Tuesday 20 June 2017

அறுவடைக் காலம்

பொன்னு விளைகின்ற பூமி
விதை நெல்லேயினி
எங்கசாமி

முப்போகம் விளைந்திட
மும்மாரி பொழிந்திட
ஏர்பூட்டி உழவுசெய்து

ஆழ உழுது
அளவாய் நீர்பாய்ச்சி
விதை நெல்லை
விதைத்து ஆரம்பமானது
முதல் விளைச்சல்

விதையும் முளைவிட
முளைத்ததை கட்டாக்கி       
ஆரம்பமானதே நாற்று நடல்

ஏலேலோ ராகம் பாடி
ஏகனை முன்நிறுத்தி
கண்ணாக நெல் வரப்பை
கழனியாக மாற்றி

தலை தாழ்ந்து நாணியே
திருமணப் பெண்போல்
எனைப்பார்த்து
நிலம் நோக்கி நின்றதுவே
நெல்மணியும்..

இறுதிப் பாய்ச்சலுக்கு
நீரின்றி நின்றவனைப்
பார்த்து

பொறுக்கவில்லை பொன்னிக்கும்
புறப்பட்டது மண்கலங்கி
கண்கலங்கி நின்றவனைப்
பார்த்து கழனி தேடி
வந்ததுவே

அறுவடையும் தொடங்கியதே
அறுத்த நெல்லும் குலுங்கியதே
விளைச்சல் செய்தது
விலை போகுமா?

விம்மலும் தொடங்கியதே
விலை தாழ்ந்திடுமோ என்று..

விளைவித்த நெல்லுக்கு
விளைவித்தவன் விலை
நிர்ணயிக்கும் நாளும் வருமா...

நான் பெற்ற பிள்ளைக்கு
நான் பெயர் வைக்கும்
நாளும் வருமா..

இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்.

No comments:

Post a Comment

Popular Posts