பொன்னு விளைகின்ற பூமி
விதை நெல்லேயினி
எங்கசாமி
முப்போகம் விளைந்திட
மும்மாரி பொழிந்திட
ஏர்பூட்டி உழவுசெய்து
ஆழ உழுது
அளவாய் நீர்பாய்ச்சி
விதை நெல்லை
விதைத்து ஆரம்பமானது
முதல் விளைச்சல்
விதையும் முளைவிட
முளைத்ததை கட்டாக்கி
ஆரம்பமானதே நாற்று நடல்
ஏலேலோ ராகம் பாடி
ஏகனை முன்நிறுத்தி
கண்ணாக நெல் வரப்பை
கழனியாக மாற்றி
தலை தாழ்ந்து நாணியே
திருமணப் பெண்போல்
எனைப்பார்த்து
நிலம் நோக்கி நின்றதுவே
நெல்மணியும்..
இறுதிப் பாய்ச்சலுக்கு
நீரின்றி நின்றவனைப்
பார்த்து
பொறுக்கவில்லை பொன்னிக்கும்
புறப்பட்டது மண்கலங்கி
கண்கலங்கி நின்றவனைப்
பார்த்து கழனி தேடி
வந்ததுவே
அறுவடையும் தொடங்கியதே
அறுத்த நெல்லும் குலுங்கியதே
விளைச்சல் செய்தது
விலை போகுமா?
விம்மலும் தொடங்கியதே
விலை தாழ்ந்திடுமோ என்று..
விளைவித்த நெல்லுக்கு
விளைவித்தவன் விலை
நிர்ணயிக்கும் நாளும் வருமா...
நான் பெற்ற பிள்ளைக்கு
நான் பெயர் வைக்கும்
நாளும் வருமா..
இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்.
விதை நெல்லேயினி
எங்கசாமி
முப்போகம் விளைந்திட
மும்மாரி பொழிந்திட
ஏர்பூட்டி உழவுசெய்து
ஆழ உழுது
அளவாய் நீர்பாய்ச்சி
விதை நெல்லை
விதைத்து ஆரம்பமானது
முதல் விளைச்சல்
விதையும் முளைவிட
முளைத்ததை கட்டாக்கி
ஆரம்பமானதே நாற்று நடல்
ஏலேலோ ராகம் பாடி
ஏகனை முன்நிறுத்தி
கண்ணாக நெல் வரப்பை
கழனியாக மாற்றி
தலை தாழ்ந்து நாணியே
திருமணப் பெண்போல்
எனைப்பார்த்து
நிலம் நோக்கி நின்றதுவே
நெல்மணியும்..
இறுதிப் பாய்ச்சலுக்கு
நீரின்றி நின்றவனைப்
பார்த்து
பொறுக்கவில்லை பொன்னிக்கும்
புறப்பட்டது மண்கலங்கி
கண்கலங்கி நின்றவனைப்
பார்த்து கழனி தேடி
வந்ததுவே
அறுவடையும் தொடங்கியதே
அறுத்த நெல்லும் குலுங்கியதே
விளைச்சல் செய்தது
விலை போகுமா?
விம்மலும் தொடங்கியதே
விலை தாழ்ந்திடுமோ என்று..
விளைவித்த நெல்லுக்கு
விளைவித்தவன் விலை
நிர்ணயிக்கும் நாளும் வருமா...
நான் பெற்ற பிள்ளைக்கு
நான் பெயர் வைக்கும்
நாளும் வருமா..
இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்.
No comments:
Post a Comment