Thursday 29 June 2017

விதையெனவே துளிர்வேனோ?

என்னென்று
 பிறப்பெடுத்தேன்!

உள்ளத்தில்
எவ்வளவோ
 ஆசைகொண்டேன்!

எனக்கென்று
 நன்மையில்லை....
 என்றேயென்னை
 படைத்துவிட்டான்!

கனவென்று
எவ்வளவோ
கடுகளவும்-
கை கூடவில்லை,

மண்ணென்ற
பூமிதனில்
 மனம்மட்டும்
ஏக்கம் கொள்ள!

ஓரடி நானேற;
ஓரடி தான் சேர்த்து
 ஏழடியாய் தடுமாற!

எத்தனை எத்தனை
 துன்பமதை
அத்தனையும் நான்
தாங்க!

அடுத்தடுத்து
எனை அழுத்த....
நான் விழுந்து
 புதைவேனோ-இல்லை
நிலமதனில்
 விதையெனவே
துளிர்வேனோ!.......?

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்!

No comments:

Post a Comment

Popular Posts