Saturday 30 September 2017

பிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார் பிந்து!

பிக்பாஸ் தமிழ் - பருவம் 01 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி செப் 30 சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனிடையே அக்டோபர் முதலாம் திகதி பிக்பாஸ் ஹிந்தி - பருவம் 11 துவங்கவுள்ளது. இதன் காரணமாகத்தான் பிக்பாஸ் தமிழ் மூன்று நாட்கள் முன்னதாக முடிக்கப்படுகிறதா என்னும் கேள்வி எழுகிறது.

பிக்பாஸ் இறுதி வாரத்துக்குள் ஐந்து போட்டியாளர்கள் கால் பதித்தனர். சினேகன், கணேஷ், ஆரவ், ஹரிஷ் மற்றும் பிந்து ஆகியோரே அந்த ஐந்து போட்டியாளர்கள் ஆவர். இறுதிப்போட்டிக்கு நால்வர் மட்டுமே தெரிவாக முடியும் என்னும் நிலையில் வாரத்தின் இடை நடுவில் ஒருவர் வெளியேறுவார் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.



வழமையாக மக்கள் வாக்குகளால் வெளியேறுபவர் கமல் முன்னிலையிலேயே வெளியேறுவார். போட்டியாளர்களும் சனிக்கிழமையன்றே வெளியேற்றம் நிகழும் எனக் கருதினார்கள்.

ஆனால் வித்தியாசமாக யோசித்த பிக்பாஸ் நள்ளிரவு ஒரு மணிக்கு பிந்துவை வெளியேற்றினார். கண்ணீருடன் விடைபெற்றார் பிந்து. போட்டியாளர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள வெகு நேரமானது. புதன்கிழமை அத்தியாயத்தில் வெளியேறினார் பிந்து மாதவி!

சனிக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிக்கு சினேகன், கணேஷ், ஆரவ் மற்றும் ஹரிஷ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். வெற்றியாளர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment

Popular Posts