கொஞ்சிப் பேசி
கோபியரை மயக்கி
கோகுலத்தில் வசிக்கும்
கிருஷ்ணன்போல் அவள்
சிரிப்பில் மயக்கி
சிந்தனையை குருடாக்கி
சிங்கார அழகில்
சிலிர்க்கச் செய்வாள்
தவழ்ந்து வந்து
தாவி எறி
மனதில் புகுந்து
மாயாஜாலம் காட்டுவாள்
மழலை மொழியில்
மாமாயென்று அழைத்து
இரு பல் அழகில்
இன்புற்று சிரிப்பாள்
பார்த்துச் சென்றால்
பாரை மறக்கச் செய்வாள்
காணாமல் சென்றால்
கண்ணீரால் அழைப்பாள்
கண்சிமிட்டி மகிழ்ந்து
கட்டி அணைத்து
காலத்தை மறக்கடித்து
கவலையை எரித்திடுவாள்
மாரோடு சாய்ந்து
மனதை வருடி
இதயத்தினுள் சிம்மாசனமிட்டு
ஏகமாய் வியாபிப்பாள்
மடியில் புரண்டு
மொட்டு விரலால்
நெஞ்சைப் பிளந்து
நெகிழச் செய்வாள்
அழுது வடிவாள்
அதிகாரம் செய்வாள்
அன்பை ஊட்டுவாள் - இறுதியில்
அம்மாவாய் மாற்றுவாள்
துவாரகையில் வசித்த
கிருஷ்ணன் இன்று
துவாரகா வடிவில்
முதலாம் அகவையை தொடுகிறாள்
அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன்
- இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -
#SATHISHVIVEKA #POEM #TAMILPOEM #SIGARAMCO
கோபியரை மயக்கி
கோகுலத்தில் வசிக்கும்
கிருஷ்ணன்போல் அவள்
சிரிப்பில் மயக்கி
சிந்தனையை குருடாக்கி
சிங்கார அழகில்
சிலிர்க்கச் செய்வாள்
தவழ்ந்து வந்து
தாவி எறி
மனதில் புகுந்து
மாயாஜாலம் காட்டுவாள்
மழலை மொழியில்
மாமாயென்று அழைத்து
இரு பல் அழகில்
இன்புற்று சிரிப்பாள்
பார்த்துச் சென்றால்
பாரை மறக்கச் செய்வாள்
காணாமல் சென்றால்
கண்ணீரால் அழைப்பாள்
கண்சிமிட்டி மகிழ்ந்து
கட்டி அணைத்து
காலத்தை மறக்கடித்து
கவலையை எரித்திடுவாள்
மாரோடு சாய்ந்து
மனதை வருடி
இதயத்தினுள் சிம்மாசனமிட்டு
ஏகமாய் வியாபிப்பாள்
மடியில் புரண்டு
மொட்டு விரலால்
நெஞ்சைப் பிளந்து
நெகிழச் செய்வாள்
அழுது வடிவாள்
அதிகாரம் செய்வாள்
அன்பை ஊட்டுவாள் - இறுதியில்
அம்மாவாய் மாற்றுவாள்
துவாரகையில் வசித்த
கிருஷ்ணன் இன்று
துவாரகா வடிவில்
முதலாம் அகவையை தொடுகிறாள்
அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன்
- இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -
#SATHISHVIVEKA #POEM #TAMILPOEM #SIGARAMCO
No comments:
Post a Comment