ஆர்ப்பரிக்கும்
அலை கடலென
அலைபாய்கிறது மனம்
எழுத்திலும்
சொல்லிலும்
சொல்லிவிட முடியவில்லை
என் உணர்வுகளை...
மொத்தமும் அழிந்து போய்
சொச்சமாய் மிச்சமிருக்கும்
வரலாற்றுச் சின்னங்களைப் போல்
என் மனதுக்குள்ளும்
ஆங்காங்கே சில
நினைவுகள்
கவனிப்பாரின்றிக்
கிடக்கின்றன...
எண்ணத்தில் உள்ளது
எந்த இறைவனுக்கும்
புரிவதில்லை
வார்த்தைகளில் சொன்னால்
மனிதர்களுக்கும் புரிவதில்லை...
அண்டம் உருவாகி
ஆயிரங்கோடி
ஆண்டுகளாகியும்
அடங்கவில்லை
அலைகடலின் சீற்றம்
அதுபோல்
இறந்த பின்னும்
அடங்கப்போவதில்லை
என் மன அலைகளும்...
கடவுளைப் போலவே
யாருக்கும் புரியாத
புதிராய்
இருந்துவிட்டுப்
போகட்டும்
என்
எண்ணங்களும்...
இப்படைப்பு கவிஞர் சிகரம் பாரதி அவர்களின் படைப்பாகும்!
அலை கடலென
அலைபாய்கிறது மனம்
எழுத்திலும்
சொல்லிலும்
சொல்லிவிட முடியவில்லை
என் உணர்வுகளை...
மொத்தமும் அழிந்து போய்
சொச்சமாய் மிச்சமிருக்கும்
வரலாற்றுச் சின்னங்களைப் போல்
என் மனதுக்குள்ளும்
ஆங்காங்கே சில
நினைவுகள்
கவனிப்பாரின்றிக்
கிடக்கின்றன...
எண்ணத்தில் உள்ளது
எந்த இறைவனுக்கும்
புரிவதில்லை
வார்த்தைகளில் சொன்னால்
மனிதர்களுக்கும் புரிவதில்லை...
அண்டம் உருவாகி
ஆயிரங்கோடி
ஆண்டுகளாகியும்
அடங்கவில்லை
அலைகடலின் சீற்றம்
அதுபோல்
இறந்த பின்னும்
அடங்கப்போவதில்லை
என் மன அலைகளும்...
கடவுளைப் போலவே
யாருக்கும் புரியாத
புதிராய்
இருந்துவிட்டுப்
போகட்டும்
என்
எண்ணங்களும்...
இப்படைப்பு கவிஞர் சிகரம் பாரதி அவர்களின் படைப்பாகும்!
No comments:
Post a Comment