Sunday 24 September 2017

தலைவன் இருக்கிறான் வாடா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதலாம் பருவத்தில் கவிஞர் சினேகன் கலந்துகொண்டுள்ளார். அவர் 13 ஆம் வாரத்தின் சனிக்கிழமை அத்தியாயத்தின் போது கமலஹாசனை சந்தித்த சந்தர்ப்பத்தில் கமலின் அடுத்த திரைப்படமாகக் கருதப்படும் 'தலைவன் இருக்கிறான்' திரைப்படத்திற்காக பாடல் ஒன்றை எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டார். கமலின் அனுமதியுடன் பாடல் வரிகளை பாடிக் காட்டினார். அந்த வரிகள் உங்களுக்காக இங்கே:



வாடா தோழா வாடா 
தலைவன் இருக்கிறான் வாடா
நம்மை நாமே சரி செய்வோம் ( 2 )
இன்றே புதியதோர் விதி செய்வோம்
என்றோ தொடங்கிய சத்திய சோதனை
இன்றும் தொடருது புரிகிறதா?
வாய்மொழி இருந்தும்
தாய்மொழி இருந்தும்
உண்மையைப் பேச முடிகிறதா?
பணந்தான் இந்த ஜனநாயகத்தை
பங்குப் போட்டு விக்கிதுடா
பாவமய்யா நம்
பாரத தேசம்
அகதியைப் போல
நிக்கிதுடா
மாற்றம் வேண்டுமா தோழா?
தலைவன் இருக்கிறான் வாடா !
அரசியல் என்பது சாக்கடையில்லை
புனித நீர் என்று சொல்லலாம்
கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட
புரட்சி விதையை ஊட்டலாம்
மாற்றம் வேண்டுமா தோழா?
தலைவன் இருக்கிறான் வாடா !
மாற்றம் வேண்டுமா தோழா?
தலைவன் இருக்கிறான் வாடா !

இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என நம்புவோம். இப்பாடலும் இத்திரைப்படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.


No comments:

Post a Comment

Popular Posts