Tuesday 10 October 2017

அன்பே சாசுவதம்

தகப்ப னுயிரும் தாய்வழி உடலும் 
இரண்டு மிணைந் துருவாகிட 
ஓரிடம் இறைவன் தந்தான்.

மலத்தில் தவழ்ந்து-மல நீரில் 

மிதந்து எச்சம் உண்டு பிறந்திட்ட 
மனிதா உயிரை சுமந்த ஊனும் பெரிதா
மண்ணில் பிறந்ததே அரிதா//

சிலநா ளுண்ண தாயு மிட்டாள் 

பலநா ளுண்ண தகப்பன் அளித்தான்// 
அறிவை ஆசான் அள்ளியே தந்தார்
அழகும் வனப்பும் இறைவ  னிட்டார்...



உலகை யறிய பலவழி தந்தான் 

உறவுக ளென்ற உதவியு மளித்தான் -
நண்பர்கள் பலவும் நயமாய் தந்தான்//

பாதைகள் நெடுகும் அனுபவம் தந்தே 

பார்த்துப் பார்த்து பக்குவம் செய்தான்-வாழ்வே
பிச்சையென் றுணர்ந்திடடா மனிதா//
 

எத்தனை போட்டி யெத்தனை 
புரட்டு வஞ்சகம் சூழ்ச்சி கொடும்பகை யேனோ//
வாழும் உயிரே யுன் தந்தை 

யளித்த பிச்சையென் றுணராய்//

உயர்வுகளென்ன தாழ்வுக ளென்ன 

மாற்றானென்ன உறவினனென்ன//
இறையளித்தன யாவும் 

உடன்பிற வாத உறவுகள் தானே//

பிறப்பவன் யாவும் மறைபவ னன்றோ-

பிறப்பு மிறப்பும் உன் செயலன்றோ// 
நினைத்த வுடனே பிறப்பது மில்லை 
மரித்திட மறுத்தால் விடுவது மில்லை//

உழைப்பவன் யாவும் வளர்வ துமில்லை-உழைத்
துழைத்தே அழிந்த வனில்லை//
அறவழி வன்முறை அவனவன் பாதை-இதில்
அழிவு மாக்கமும் இறைவழிப் பாதை//

விரோதங்கள் குரோதங்கள் வீணா யேனோ//  

கோபம் என்பது வீழ்ந்திடத்தானோ//
வாழும் பொழுதில் பகைமையு மேனோ 

மனிதனின் வாழ்வே மகிழ்ந்திடத் தானோ//

பிறப்பது மிறப்பது ஒருமுறை தானே 

வாழ்வே பிறர்க்கு உதவிடத் தானே ஏற்ற 
இறக்கம் இறையிட மில்லை 
அன்பு ஒன்றே முக்தியி னெல்லை...

-இப்படைப்பு கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -

No comments:

Post a Comment

Popular Posts