Sunday 18 February 2018

கவிக்குறள் - 0009 - ஓட்டைகள் நிறைந்த ஓடம்!

திருக்குறள் 
 
அதிகாரம் 61
மடி இன்மை

****

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன் (குறள் 605)

*****

ஓட்டைகள் நிறைந்த ஓடம்!

*****



சரியான
நேரந்தன்னில்
முறையாகச்
செய்தல் விட்டு
பிறகேதான்
செய்வோம் என்று
பெரிதாகச்
சோம்பல் கொள்வோர் ,

நினைவினில்
உறுதி யின்றி
மறதியில்
மூழ்கி நிற்போர்
சோம்பலை
மடியில் கட்டி
சுமந்துமே
முடங்கிப் போவோர் ,

பகலிலும்
இரவைப் போன்று
படுத்துமே
உறக்கம் கொண்டு
ஒன்றுமே
நினைவில் லாமல்
உறக்கமே
உயிரென் போர்கள் ,

ஓட்டைகள்
பலவும் உள்ள
ஓடத்தைத்
தேர்ந் தெடுத்து
அக்கரை
செல்லு தற்கு
ஆசையும்
பட்டாற் போன்றாம் ,

காலத்தை
வீணாக் காது
காரிருள்
மனங் கொள்ளாது
வாழ்வினை
வகுப்போர் தானே
வையத்தில்
உயர்வா ரென்றான்!

****

நெடுநீர் - காலம்தாழ்த்துதல் .

மறவி - கடமைகளை மறந்துபோதல் ,

மடி - சோம்பேறித்தனம் .

துயில் - அளவுக்குமீறிய தூக்கம் .

கெடுநீரார் - அழிவினை விரும்புகின்றவர் .

காமக்கலன் - விரும்பி பயணம் செய்யும் ஓடம்.

****

மானம்பாடி புண்ணியமூர்த்தி.
10.02.2018.

#060
2018.02.18
கவிக்குறள் - 0009 - ஓட்டைகள் நிறைந்த ஓடம்! 
https://www.sigaram.co/preview.php?n_id=288&code=LxWjHoAD    
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி   
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை  
#சிகரம்   


No comments:

Post a Comment

Popular Posts