திருக்குறள்
அதிகாரம் 60
ஊக்கம் உடைமை
***
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு (குறள் 595)
*****
எண்ணமே அளவாகும்!
****
வள்ளுவன்
ஓர்நாள் தன்னூர்க்
குளக்கரை
சென்ற மர்ந்து
அக்குளம்
பூத் திருந்த
அல்லியின்
அழகைக் கண்டான் ,
இரவினில்
இடியும் மின்னல்
இடைவிடா
மழை பொழிந்து
குளத்திலே
நிறையத் தண்ணீர்
கொண்டுமே
உயர்ந்த தங்கே,
மறுநாளும்
அங்கே சென்று
மகிழ்வுடன்
குளத்தைப் பார்த்தான்
நேற்றைக்குக்
கீழே நின்ற
மலரெல்லாம்
மேலே கண்டான் ,
முழங்காலின்
அளவே நின்ற
மலரெல்லாம்
கழுத் தளவு
தண்ணீரின்
மேலே வந்து
தமைப் பார்த்துச்
சிரிக்கக் கண்டான் ,
ஆகாகா
மனிதர் வாழ்வும்
அவரெண்ணம்
அளவே நிற்கும்
உயர்வுக்கும்
தாழ்த லுக்கும்
உன்உள்ளம்
அளப்பாய் என்றான்!
*****
அனைய - அந்தஅளவு.
****
மானம்பாடி புண்ணியமூர்த்தி.
09.02.2018.
அடித்தளம் அன்பைவைத்து
அதில்தூணாய் அறிவைநட்டு
வாழ்வினைக் கட்டுவோர்க்கு
வளங்களும் நலமும்சேரும்!
***
நிறைமன அன்பின் ....
வணக்கமும் வாழ்த்துகளும்!
#039
கவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்!
https://www.sigaram.co/preview.php?n_id=269&code=59b1q40Q
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்
அதிகாரம் 60
ஊக்கம் உடைமை
***
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு (குறள் 595)
*****
எண்ணமே அளவாகும்!
****
வள்ளுவன்
ஓர்நாள் தன்னூர்க்
குளக்கரை
சென்ற மர்ந்து
அக்குளம்
பூத் திருந்த
அல்லியின்
அழகைக் கண்டான் ,
இரவினில்
இடியும் மின்னல்
இடைவிடா
மழை பொழிந்து
குளத்திலே
நிறையத் தண்ணீர்
கொண்டுமே
உயர்ந்த தங்கே,
மறுநாளும்
அங்கே சென்று
மகிழ்வுடன்
குளத்தைப் பார்த்தான்
நேற்றைக்குக்
கீழே நின்ற
மலரெல்லாம்
மேலே கண்டான் ,
முழங்காலின்
அளவே நின்ற
மலரெல்லாம்
கழுத் தளவு
தண்ணீரின்
மேலே வந்து
தமைப் பார்த்துச்
சிரிக்கக் கண்டான் ,
ஆகாகா
மனிதர் வாழ்வும்
அவரெண்ணம்
அளவே நிற்கும்
உயர்வுக்கும்
தாழ்த லுக்கும்
உன்உள்ளம்
அளப்பாய் என்றான்!
*****
அனைய - அந்தஅளவு.
****
மானம்பாடி புண்ணியமூர்த்தி.
09.02.2018.
அடித்தளம் அன்பைவைத்து
அதில்தூணாய் அறிவைநட்டு
வாழ்வினைக் கட்டுவோர்க்கு
வளங்களும் நலமும்சேரும்!
***
நிறைமன அன்பின் ....
வணக்கமும் வாழ்த்துகளும்!
#039
கவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்!
https://www.sigaram.co/preview.php?n_id=269&code=59b1q40Q
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்
No comments:
Post a Comment