Sunday 25 February 2018

கவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு!

திருக்குறள்
அதிகாரம் 64
அமைச்சு

****

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்
வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு (குறள் 632)

****

திறன்மிகு அரசு!

****

அஞ்சாமை
மனத்தில் கொண்டு
அகத்தினில்
தூய்மை கொண்டு
வகையுடன்
கல்வி கற்று
வாழ்ந்திடும்
மக்கள் காத்து,

செயல்களில்
மாற்றார் போற்றச்
செய்துமே
சிறந்து நின்று
சிறுமைக்கு
வெட்கப் பட்டு
அருமிகு
அறிவைப் பெற்று,




இருப்பவர்
தானே இங்கே
அமைச்செனும்
தகுதி உள்ளோர்
இவையெலாம்
இல்லா ராகில்
இழிவினை
ஏற்க நேரும்,

தன்பெண்டு
பிள்ளை காத்து
தனக்கெனத்
திருடிச் சேர்த்து
வாழ்ந்திட
முனைந்தா ரானால்
வசைவாங்கி
அழிய நேரும்,

தகுதியே
இல்லார் தம்மை
தலைவராய்த்
தேர்ந்தோ மானால்
மிகுதியாய்த்
துன்பம் ஓங்கும்
மீளவே
முடியா தென்றான் !

****

வன்கண் - உறுதிப்பாடு.

ஆள்வினை - பெருமுயற்சி.

மாண்டது - பெருமை பெற்றது .

*****

மானம்பாடி புண்ணியமூர்த்தி.
17.02.2018.

#068/2018 
2018.02.25 
திறன்மிகு அரசு!      
https://www.sigaram.co/preview.php?n_id=295&code=GX68UNSl    
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி   
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை  
#சிகரம்   


No comments:

Post a Comment

Popular Posts