திருக்குறள்
அதிகாரம் 64
அமைச்சு
****
வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்
வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு (குறள் 632)
****
திறன்மிகு அரசு!
****
அஞ்சாமை
மனத்தில் கொண்டு
அகத்தினில்
தூய்மை கொண்டு
வகையுடன்
கல்வி கற்று
வாழ்ந்திடும்
மக்கள் காத்து,
செயல்களில்
மாற்றார் போற்றச்
செய்துமே
சிறந்து நின்று
சிறுமைக்கு
வெட்கப் பட்டு
அருமிகு
அறிவைப் பெற்று,
இருப்பவர்
தானே இங்கே
அமைச்செனும்
தகுதி உள்ளோர்
இவையெலாம்
இல்லா ராகில்
இழிவினை
ஏற்க நேரும்,
தன்பெண்டு
பிள்ளை காத்து
தனக்கெனத்
திருடிச் சேர்த்து
வாழ்ந்திட
முனைந்தா ரானால்
வசைவாங்கி
அழிய நேரும்,
தகுதியே
இல்லார் தம்மை
தலைவராய்த்
தேர்ந்தோ மானால்
மிகுதியாய்த்
துன்பம் ஓங்கும்
மீளவே
முடியா தென்றான் !
****
வன்கண் - உறுதிப்பாடு.
ஆள்வினை - பெருமுயற்சி.
மாண்டது - பெருமை பெற்றது .
*****
மானம்பாடி புண்ணியமூர்த்தி.
17.02.2018.
#068/2018
2018.02.25
திறன்மிகு அரசு!
https://www.sigaram.co/preview.php?n_id=295&code=GX68UNSl
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
-
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீ...
-
தாய் வழியே தங்கையாய் வந்தவளே... தமையன் எழுதுகிறேன் தங்கைக்கோர் கவிதையை... ஐயிறு திங்கள் எனைத் தாங்கிய மடி உனைத் தாங்கிட... ஓராயிரம்...
-
அதிகாரம் 43 - அறிவுடைமை ******* அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்க லாகா அரண்...
-
மனநல மருத்துவமனை: நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.. மருத்துவர் : அப்படியா? எங்க அந்தக் கதைய சொல்லு... ...
-
வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படி...
-
வேடுவனவனும் வனத்தின் நடுவேயருகனை கண்டனன், நாடியமனதால் தன்னிலைமறந் தயர்ந்தே நின்றனன், சூட்டினன்காட்டு மலர்களைக்கொய்து வாய்நீரா லிறையைக்...
-
01 ஆறுதலுக்காகத்தான் தோள்சாய்கிறேன்! ஆதாயத்திற்கென நினைத்துக்கொள்கிறது இந்த உலகம்! 02 பைத்தியமாவதைவிட, பேரானந்தம் வேறென்ன இருந்துவ...
-
வணக்கம் நண்பர்களே! நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...
-
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்...
No comments:
Post a Comment