திருக்குறள்
அதிகாரம் 64
அமைச்சு
****
வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்
வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு (குறள் 632)
****
திறன்மிகு அரசு!
****
அஞ்சாமை
மனத்தில் கொண்டு
அகத்தினில்
தூய்மை கொண்டு
வகையுடன்
கல்வி கற்று
வாழ்ந்திடும்
மக்கள் காத்து,
செயல்களில்
மாற்றார் போற்றச்
செய்துமே
சிறந்து நின்று
சிறுமைக்கு
வெட்கப் பட்டு
அருமிகு
அறிவைப் பெற்று,
இருப்பவர்
தானே இங்கே
அமைச்செனும்
தகுதி உள்ளோர்
இவையெலாம்
இல்லா ராகில்
இழிவினை
ஏற்க நேரும்,
தன்பெண்டு
பிள்ளை காத்து
தனக்கெனத்
திருடிச் சேர்த்து
வாழ்ந்திட
முனைந்தா ரானால்
வசைவாங்கி
அழிய நேரும்,
தகுதியே
இல்லார் தம்மை
தலைவராய்த்
தேர்ந்தோ மானால்
மிகுதியாய்த்
துன்பம் ஓங்கும்
மீளவே
முடியா தென்றான் !
****
வன்கண் - உறுதிப்பாடு.
ஆள்வினை - பெருமுயற்சி.
மாண்டது - பெருமை பெற்றது .
*****
மானம்பாடி புண்ணியமூர்த்தி.
17.02.2018.
#068/2018
2018.02.25
திறன்மிகு அரசு!
https://www.sigaram.co/preview.php?n_id=295&code=GX68UNSl
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
-
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீ...
-
தாய் வழியே தங்கையாய் வந்தவளே... தமையன் எழுதுகிறேன் தங்கைக்கோர் கவிதையை... ஐயிறு திங்கள் எனைத் தாங்கிய மடி உனைத் தாங்கிட... ஓராயிரம்...
-
சங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...
-
தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிகரம் இணையத்தளத்தின் சிறப்பு நேர்காணல்: ஆண்டு விழா நாள் : 28.12.2017 நேர்...
-
வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படி...
-
அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து குறள் 01 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ஒருவரி குறள் விளக்கம் : அகரம்...
-
உலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...
-
புலர்ந்திடும் பொழுதில் புலன்பெயராதவள் நினைவுகள் மார்துளைத்த ஈட்டியாய் மனதை வதைக்கிறது நாளும் சாகிறேன் நாட்காட்டியாய் கிழிகிறேன் கரைச...
-
உழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...
No comments:
Post a Comment