Saturday 10 February 2018

இலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையில் வாக்களிப்பது எப்படி?

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் இன்று சனிக்­கி­ழமை காலை 7 மணி­முதல் மாலை 4 மணி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லையில் இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் புதிய முறையில் நடை­பெ­ற­வுள்­ளதால் தேர்­தலில் எவ்­வாறு வாக்­க­ளிப்­பது என்ற தெளிவை வாக்­கா­ளர்கள் பெற்­றுக்­கொள்­ள­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

கடந்த காலங்­களில் தேர்தல் செய­ல­கமும் சிவில் நிறு­வ­னங்­களும் ஊடக நிறு­வ­னங்­களும் புதிய தேர்தல் முறை­மையில் வாக்­க­ளிப்­பது எவ்­வாறு என்ற தெளி­வு­ப­டுத்­தலை போது­மான அளவு வழங்­கி­யி­ருந்­தன. வாக்­கா­ளர்கள் இது­தொ­டர்பில் ஒரு சரி­யான தெளிவைப் பெற்­றுக்­கொள்­வது அவ­சி­ய­மாகும். இம்­முறை உள்­ளூ­ராட்சி தேர்­த­லா­னது வட்­டார மற்றும் விகி­தா­சார முறை­மை­களைக் கொண்ட கலப்பு முறை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.



வட்­டார முறை­மையில் 60 வீத­மான உறுப்­பி­னர்­களும், விகி­தா­சார முறையில் 40 வீத­மான உறுப்­பி­னர்­களும் இந்தத் தேர்தல் மூலம் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இம்­முறை புதிய தேர்தல் முறை­மையில் விருப்பு வாக்கு முறைமை உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. மாறாக வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்பு நிலை­யத்தில் வழங்­கப்­படும் வாக்­குச்­சீட்டில் கட்­சி­களின் பெயர்­களும் சுயேச்­சைக்­கு­ழுக்­களின் இலக்­கங்­களும் அதன் சின்­னங்­களும் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­ப­தற்­கான இடை­வெ­ளியும் காணப்­படும்.

வாக்கு சீட்டைப் பெற்­றுக்­கொள்ளும் வாக்­கா­ளர்கள் தமக்கு பிடித்த கட்சி, அல்­லது சுயேச்­சைக்­கு­ழுக்­களின் சின்­னங்­க­ளுக்கு நேராக வழங்­கப்­பட்­டுள்ள இடை­வெ­ளியில் தமது புள்ளடியை இட்டு வாக்களிக்க முடியும். தமது வாக்கை புள்ளடிமூலம் இட்டபின்னர் வாக்காளர்கள் வாக்குச்சீட்டை மடித்து வாக்குச்சீட்டை வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடவேண்டும். 

செய்தி நன்றி : வீரகேசரி 


#சிகரம் #சிகரம்செய்திகள் #உள்ளூராட்சிதேர்தல்2018 #LGpollSL


No comments:

Post a Comment

Popular Posts