Sunday 18 February 2018

கவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை!

அதிகாரம் 59
ஒற்றாடல்

****

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர் 
ஒற்றினால் ஒற்றிக் கொளல் (குறள் 589)

*****

துப்புக்கும் துப்புவை!

*****



நாட்டினை
ஆட்சி செய்யும்
நல்லதோர்த்
தலைவ னுக்குப்
பலவகை
உதவி வேண்டும்
படைபலம்
நன்கு வேண்டும் ,

அதனினும்
சிறந்த ஒன்று
அவனுக்கு
என்ன வென்றால்
எதனையும்
அறிந்து சொல்லும்
தனிவகை
ஒற்றர் வேண்டும் ,

ஒற்றர்கள்
உண்மை யாக
உரைக்கின்ற
தன்மை ஆய
ஒற்றரை
மற்றோர் ஒற்றால்
ஒற்றாடச்
செய்தல் வேண்டும் ,

நிலைபெற்று
ஆட்சி செய்யப்
பழியெண்ணா
ஒற்றர் வேண்டும்
விழிப்புடன்
இருந்தால் தானே
தவிர்க்கலாம்
அழிவை யென்றான் ,

காவலன்
கள்வ னானால்
காத்திடல்
யாராலாகும்
காவலைக்
காவல் செய்து
கவனமாய்
ஆள்க வென்றான்!

****

ஒற்றர் - துப்புஅறிபவர்.

பொருளையும் - சொன்ன செய்தியையும் .

ஒற்றிக்கொளல் - தெரிந்துகொள்ள வேண்டும் .

****

மானம்பாடி புண்ணியமூர்த்தி .
07.02.2018.

#058
2018.02.18 
கவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை!  
https://www.sigaram.co/preview.php?n_id=286&code=PtgjVRpz    
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி  #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #சிகரம்       


No comments:

Post a Comment

Popular Posts