Thursday 27 July 2017

என் தங்கை

தங்கை என்பவள்
தங்கை மட்டுமா...

அண்ணன்கள் உலகின்
முதல்
நம்பிக்கைக்குரிய தோழி...

அவளது நம்பிக்கை
தந்தைக்கு பிறகு
அண்ணனே...

நமது முதல்
மகள்
அவள்...

அவளது ஆதரவு
எப்போதும்
முதன்மையாய்
நமக்கே...



அவளது சிரிப்பிற்காய்
எதுவும் செய்வான்
எல்லா அண்ணனும்...

அவளுக்காய்
எதுவும்
அண்ணனே...

சமூகமும்
இதை உணர்ந்தே
தாய்க்கு பின்
தாய்மாமன்
என
அவளது குழந்தைக்கும்
அவளது அண்ணனையே
சிறப்பு செய்கிறது ...

பிறந்தகத்திலும்
புகுந்தகத்திலும்
அண்ணனின்
நிரந்தர
ஆதரவாளராய்
அன்பு தங்கை
மட்டுமே ...

தாயின் அன்பை
மகளின் பாசத்தை
தங்கையின் பிரியத்தில்
ஒருசேர உணரலாம்...

தமிழின் சிறப்பு
தன் கை
என்பதே
தங்கையாம்...

நான்கு கைகள்
உடையோர்
தெய்வமெனில்
தன் கை
தங்கை
இரண்டும் சேர்த்து
நான்கு கை

இணைந்த இருகை
தமக்கை...
தங்கையுடன் பிறந்தோர்
தரணிவெல்வர்...⁠⁠⁠⁠

என்னவானால் என்ன...
தங்கத்திற்கு மதிப்புண்டு
தங்கைகளுக்கு
மதிப்பில்லை...

அனைத்து அன்புநிறை சகோதரிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்...

அண்ணன் எப்போது அவளின் தந்தையாகிறானோ... ஒரு தந்தையின் பாதுகாப்பை எப்போது அத்தங்கை அண்ணனிடம் உணர்கிறாளோ அப்போதுதான் ஒவ்வொரு அண்ணனும் முழுமை பெறுகிறான்....

தந்தையாகும் அண்ணன் அனைவருக்கும் வாய்ப்பதில்லை...

வாய்த்தல் வரம்...

 இக்கவிதை கவிஞர் அகரம் பார்த்திபன் அவர்களின் படைப்பாகும்.

No comments:

Post a Comment

Popular Posts