Thursday 6 July 2017

காதலெது காமமெது?

ஒருமுறை பார்த்த முகம்
ஓராயிரம் படிமங்களாய் கண்ணில்..

அங்குலமாய் செதுக்கினானோ
உளிகொண்டு பிரம்மனும்
பிரபஞ்ச அழகியாய்
பிறப்பெடுக்கச் செய்தானோ



மையிடும் விழியாலே
மயக்கினாளே என்னையும்..
மருங்கி தவிக்கிறேன்
சிலை போன்ற உடல் கண்டு...

சிரிக்கையில் கன்னத்தின் குழியும்
சரியென்று தலையாட்டும் அழகும்
பொய்யாய்ச் சிறு சண்டையும்
போலியாய் வரும் கோபமும்

ஆட்கொள்கிறது நாளும்
அழகியே என்னை..
அடிமையாய்ப் போனேன்
உன் தாசனாகிப் போனேன்..

சுண்டு விரல் கோர்த்து
சுற்றி வலம் வந்து
உறவினர் சாட்சியாய்
உறவும் தொடங்கியதே

நீளும் இரவில்
நிலவின் இதத்தில்
நிறைவேறிடத் துடிக்கிறது
காதலும் காமமும்

இரண்டுக்கும் போட்டி
அடித்துக் கொண்டே
அணைக்கத் துடிக்கிறது
யார் வெல்வார்
யாரறிவார்

பொங்கிடும் ஆசைகளை
பொசுக்குகியது அவள் விழி
ஆண்மையும் நாணுதே
அவளருகில் இருக்கையில்


அணைத்த உடம்பினில்
ஆயிரம் கீறல்கள்
அனைத்தும் சுகமாய்
அணுவும் உணருதே
ஆனந்த உறவை

ஏக்கம் தீர
ஏங்கிய மனது
எகிறி அடங்கிய
மூச்சுத் திணறலின்
பின்

ஆழ்மனம் கேட்குதே
காதலெது காமமெது என்று...
காதலாகி இசைகையில்
காதலும்... காமமும்... ஒன்றே..

இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும்.


No comments:

Post a Comment

Popular Posts