Tuesday 25 July 2017

களவு போன கனவுகள் - 01

களவு போன கனவுகள்
(My sincere thanks to those wonderful artists whose paintings/photos I have used here)
This is a translation / influence of the long poem "DESERTED VILLAGE" written by OLIVER GOLDSMITH. The original lines in English are given beneath the translated one .)


இங்கு நான் எழுதிப் பதிவு செய்துள்ள ‘களவு போன கனவுகள்’ என்ற நீண்ட கவிதை, Oliver Goldsmith அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘DESERTED VILLAGE’ என்ற நீண்ட கவிதையின் பாதிப்பு, ஓரளவுக்கு ‘மொழி பெயர்ப்பு’ என்றும் கூறலாம் !



வாணியை வேண்டல்:

உள்ளம் வேண்டுவது உள்ளபடி அருள்செய்து
தெள்ளத் தெளிவாகத் திறமை வெளிக்கொணர்ந்து
தேடும் பொருள்ஞானச் செல்வம் எனக்களித்து
வாழும் படிக்குவைத்த வாணியே வாழ்த்துகிறேன்!


வளமை இளமை புதுமை எனவிதித்த
செம்மைச் சிறப்பனைத்தும் திறமா யியம்பிடவும்,
தெளிவாய் முதல்நூலை முழுதும் மனத்துணர்ந்து
மாசறு தமிழதனில் பெயர்த்தி டவும் ,


மனந்தளரா உறுதியதும், மற்றெந்த இடையூறும்
மறிக்காத நிலையதுவும், மலர்வாழும் மாதா!
மனங்கனிந்து மதிகுளிர்ந்து எனக்கருள வேண்டுகிறேன்!
மறந்தும் உனைமறவா மனமருள வேண்டுகிறேன் !


மந்திரமும் மறையும் மறைசான்ற பெரியோரும்
மறவாமல் வாழ்த்துகின்ற மாதாவே மனமிரங்காய் !
மதிமறந்து மதியாமல் செய்பிழைகள் பொறுத்துச்
செப்புமொழி தனில்சேர்ந்து உனைவாழ்த்த அருள்வாய் !


சேரும் இடம்சேர்ந்து நான்சேர ஞானச்
செல்வம் தானாக வெனைச் சேரத்
தேனூறும் வார்த்தைகள் தெவிட் டாத
தோத்திரமா யென்றென் றுமுனைப் பாடக்


காணும் பொருளெல்லாம் கவிமய மாய்
கண்கள் என்றென்றும் ஒளிமய மாய்
கருத்தில் உன்னுருவம் சொல்மய மாய்
கலையா திருந்திடவே வரம்தரு வாய் !
கலையே! அருட்கடலே கண்திற வாய் !

இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.


                                                                                               கனவுகள் தொடரும்....

No comments:

Post a Comment

Popular Posts