Wednesday 19 July 2017

காலம்

மனம் கனக்கும் சூழலில்
காகிதமும்
மலையாகும்...

மன அழுத்த காலத்தில்
இயல்மூச்சு
வாதமாகும்...

சூழலின் குளுமையும்
உள்ளத்தின் வெம்மையால்
கூட்டத்திலும்
தனிமை உணர்த்தும்...

உணவுகள் மறுத்து
உறக்கம் தொலைத்து
நமக்கு நாமே
பகையாவோம்...

என்னசெய்ய...



உண்பது நாம்
எனினும்
சீரணிப்பதை
நம் கையில்
எடுப்பதில்லை...

அதுபோல
செயல்களை
கவனத்துடன் செய்வோம்
விளைவுகள்
யோசிக்க வேண்டாம்...

சிறந்த விதைக்கான
சிறந்த சூழல்
இயற்கை தரும்...

காத்திருத்தலையும்
பொறுத்திருத்தலையும்
தவமாய் செய்யும்
எவரையும்
காலம் உயர்த்தாமல்
சென்றதில்லை...

உயர்வான வாழ்விற்கு
உயர்வான எண்ணங்களுடன்
தவமாய் காத்திருப்போம்...

காலத்தால் உயர்வோம்
கடமையினை செய்வோம்

மழைக்காக அல்லாது
நிலத்திற்காக
விதைப்போம்...

விதைகள்
விளையும்...
கவலைகள்
களையும்...

காலமே
எல்லாம்...⁠⁠⁠⁠

இக்கவிதை கவிஞர் அகரம் பார்த்திபன்அவர்களின் படைப்பாகும்.





No comments:

Post a Comment

Popular Posts