Sunday 2 July 2017

பயணி

பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்...
வெறுமையும் நம்பிக்கையுமே
வாழ்க்கையாக...

பூமிசுழன்று சுழன்று
உழைப்பதால்
அதன் வியர்வை
வெப்பத்தால்
ஆவியாகி
மழையாக பொழிந்து
பசுமை கொழிக்கிறது...

நல்லெண்ணங்கள்
நற்சிந்தனை
நல்நம்பிக்கை
இவைதவிர
வேறொன்றுமில்லை ...










உழைப்பும்
களைப்பும்
பிழைப்புமாக
வாழ்க்கை....

மகிழ்ச்சி எது
நிறைவு எது
நிம்மதி எது...

தேடியபடியே
ஓடுகின்ற வாழ்க்கையில்
தேடிக்கண்டடைவது
எது...

பார்த்துக்
கொண்டேயிருக்கிறேன்
நம்பிக்கைகொண்ட
பயணியாக....⁠⁠⁠⁠

இது கவிஞர் அகரம் பார்த்திபன் அவர்களின் படைப்பாகும்.

No comments:

Post a Comment

Popular Posts