உண்பது
உடுப்பது
உறங்குவது
என
எதுவும்
கடமை...
ஒவ்வொன்றும்
கடமையே...
கடமையென்று
தனியாக
எதுவுமில்லை...
எதுவும்
கடமையென
கருத்தினில்
இருத்தி
கவனத்துடன்
செய்வோர்க்கு
அவனியில்
சுகமே...
ஊசிகோர்ப்பது
உணர்வாய் இழைப்பது
என்ற கடமையால்
கிடைப்பது
சிறந்த உயர்தர
மானம் காக்கும்
மகிழ்வான ஆடை...
எனவே
நமக்கு தெரியாது
ஒவ்வொரு சிறிய
செயல்களின் கூட்டு
சிறப்பான
மிகச்சிறப்பான
பிறிதொன்றாக
புகழ்பெறும்...
எனவே
எதையும் சிறிதென
எண்ணாமல்
கவனத்துடன்
கடமையென
கருதுவோம்...
சிறியவை அழகு...
சிறுதுளி பெருவெள்ளம்...
இக்கவிதை கவிஞர் அகரம் பார்த்திபன்அவர்களின் படைப்பாகும்!
No comments:
Post a Comment