--------*
குறிஞ்சித் திணை
-------------
கூடல்
வேங்கை போல்
வேட்டையாடி வாழ்ந்து
வேல் கொண்ட நாயகனை
வேதமாய் வணங்கி
மலையெங்கும் வாழ்ந்திடும்
மக்கள் கூட்டம்
குறிஞ்சி என்றழைப்பார்கள்
குறிப்பாய் இந்நிலத்தை
நாள் முழுதும்
நெடுந்தூரம் போராடி
வில்லால் வீழ்த்தி வந்தேன்
வடிவான ஓரு மானை
கனிவான உன் முகத்தை
காண வேண்டி
மலையருவி கடந்து வந்தேன்
முத்தான என் காதலியே
குறிஞ்சிப் பூ சூடி
குலவிளக்காய் வீற்றிருக்கும்
பொன்னான உன் முகத்தைப்
பொழுதேனும் காட்டிவிடு
கடுக்கும் என் வலியும்
கரைந்திடுமே மேகமாய்
துள்ளிடும் மானாய்
தூரம் போவதுமேனோ
காந்தத்தின் எதிர்புறமாய்
கடப்பதும் ஏனோ
அழகு முகம் காண
ஆசையுடன் நிற்கிறேன்
சுனை நீர்போல்
சுரக்கிறது உன் ஞாபகம்
தாரமாய் வந்துவிடு
தாங்குவேன் எப்பொழுதும்
தங்கமாய் உனை நானே
அணைத்து மகிழ்வேன்
ஆசையாய் மொழிவேன்
ஆனந்தக் கூத்தாடி
அடி மார்பில் புதைந்திடுவேன்...
சொல்லில் அடங்கா
இன்பத்தை தித்திக்க
தந்திடுவேன் திகட்டாமல்
நானே...
முல்லைத் திணை
-------------
காத்திருப்பு
ஆசையாய் கேட்டால்
அசைந்தாடி வந்திடுவேனா?
பகல் கனவு வேண்டாம்
பொய்யாய்ப் போய்விடாதோ?
ஆவினம் மேய்த்து
காடு கரையெங்கும்
களைத்து அலைந்து
காதலியான என்னைக்
கணந்தோறும் நினைத்து
கனங்கூடிய இதயமுடன்
காடு விட்டு வீடு
திரும்பும் கள்வனே
வழியின் மேல்
விழி வைத்து காத்திருக்கிறேன்
ஏங்க வைத்தது போதும்
ஏரு தழுவி
ஏறுமுகம் கொண்டு வா
மாயோன் முன்
மணமுடிப்போம் ...
மங்கை நான்
சத்தியமாய் உரைக்கிறேன்
சாகும் நிலை வரினும்
சத்தியம் மீறமாட்டேன்..
பாலைத் திணை
------------*
பிரிதல்
ஆசையாய்க் காதல் கொண்டு
உடையவன் இவன் தானென்று
பெற்றோரை உதறிக் கிளம்பிடுவாய்
பட்ட பாடலெல்லாம்
வீணாக்கி சென்றிடுவாய்
ஊரார் வாய்மொழி
உரைப்பது கேட்பாயோ
பெற்றவன் வருந்துவதை
பார்க்கத் தான் நினைப்பாயோ
பருவத்தின் கோளாறிது
பக்குவமாய் சொல்கிறேன்
பணிந்து நடந்திடு
பற்றியவனை விட்டிடு
சுற்றம் சூழ
சீராய் நடந்திடும்
என் அக்கனின் மகனுடன்
உன் திருமணம்
அடங்கி நடந்து கொள்
ஊரார் இகழ்ந்தால்
அப்பன் உயிர் போயிடும்
இது துர்க்கையின் மேல்
சத்தியம் மறவாது
இருந்திடு...
மருதத் திணை
-----------
ஊடல்
காதலை எதிர்த்தும்
காதலனைப் பார்க்க
வயல்தேடி வந்தாளே
வாடிய முகத்துடன் மங்கை
ஏரு பூட்டி
உழவு செய்யும் காதலன்
காண்கிறான் காதலியை
கண்ணோடு தாங்குகிறான்
ஊர் உறங்கும்
இரவில் சொலிக்கும்
நிலவாய் காதல் பூத்திருக்க
நிலவில்லா பகலில்
முகம் வாடி வந்தவளை
மோகமுடன் பார்த்தான்..
கோபம் மேலிட்டு
கக்கினாள் செந்தணலாய்
தந்தையின் வார்த்தையை
கேட்டதும் பதட்டம்
கொள்ளாது கட்டியணைத்து
கலங்காதே காலத்தில்
களம் வருவேன்
மாற்றான் கரத்தை
மரமெனத் துண்டித்து
மங்கல நாண் ஏற்றுவேன்
மணமகனாய் நானே...
இது இந்திரன் மேல் ஆணை...
நெய்தல் திணை
------------*
வருந்துதல்
ஊர்கூடி நிற்கிறது
உற்றவன் மட்டும் காணவில்லை
மாற்றான் ஒருவன்
மணமகனாய் அமர்ந்திருக்க
உடம்பும் கூசுதே
உணர்வும் சாகுதே
உடனே வருவாயோ
உமையவளாய் ஏற்பாயோ
கனக்கிறது நெஞ்சம்
கரை சேர்க்க வா
ரதமேறி வந்துவிடு
ரணத்தை ஆற்றிவிடு
அறியாமல் இருந்தவளிடம்
ஆசை வார்த்தை மொழிந்தாய்
அன்பே என்றாய்
அழகேயென ஆராதித்தாய்
வீழ்ந்தேனே உன் மையலிலே
விழுந்தவள் துடிக்கிறேனே எழாமல்...
விரைந்து மீட்பாய்
வாட்டத்தைப் போக்குவாய்...
வருணன் பொழியும்
மாரி போல்
ஏகமாய் பொழிந்து
ஏக்கத்தை தீர்த்துவிடு...
இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்!
குறிஞ்சித் திணை
-------------
கூடல்
வேங்கை போல்
வேட்டையாடி வாழ்ந்து
வேல் கொண்ட நாயகனை
வேதமாய் வணங்கி
மலையெங்கும் வாழ்ந்திடும்
மக்கள் கூட்டம்
குறிஞ்சி என்றழைப்பார்கள்
குறிப்பாய் இந்நிலத்தை
நாள் முழுதும்
நெடுந்தூரம் போராடி
வில்லால் வீழ்த்தி வந்தேன்
வடிவான ஓரு மானை
கனிவான உன் முகத்தை
காண வேண்டி
மலையருவி கடந்து வந்தேன்
முத்தான என் காதலியே
குறிஞ்சிப் பூ சூடி
குலவிளக்காய் வீற்றிருக்கும்
பொன்னான உன் முகத்தைப்
பொழுதேனும் காட்டிவிடு
கடுக்கும் என் வலியும்
கரைந்திடுமே மேகமாய்
துள்ளிடும் மானாய்
தூரம் போவதுமேனோ
காந்தத்தின் எதிர்புறமாய்
கடப்பதும் ஏனோ
அழகு முகம் காண
ஆசையுடன் நிற்கிறேன்
சுனை நீர்போல்
சுரக்கிறது உன் ஞாபகம்
தாரமாய் வந்துவிடு
தாங்குவேன் எப்பொழுதும்
தங்கமாய் உனை நானே
அணைத்து மகிழ்வேன்
ஆசையாய் மொழிவேன்
ஆனந்தக் கூத்தாடி
அடி மார்பில் புதைந்திடுவேன்...
சொல்லில் அடங்கா
இன்பத்தை தித்திக்க
தந்திடுவேன் திகட்டாமல்
நானே...
முல்லைத் திணை
-------------
காத்திருப்பு
ஆசையாய் கேட்டால்
அசைந்தாடி வந்திடுவேனா?
பகல் கனவு வேண்டாம்
பொய்யாய்ப் போய்விடாதோ?
ஆவினம் மேய்த்து
காடு கரையெங்கும்
களைத்து அலைந்து
காதலியான என்னைக்
கணந்தோறும் நினைத்து
கனங்கூடிய இதயமுடன்
காடு விட்டு வீடு
திரும்பும் கள்வனே
வழியின் மேல்
விழி வைத்து காத்திருக்கிறேன்
ஏங்க வைத்தது போதும்
ஏரு தழுவி
ஏறுமுகம் கொண்டு வா
மாயோன் முன்
மணமுடிப்போம் ...
மங்கை நான்
சத்தியமாய் உரைக்கிறேன்
சாகும் நிலை வரினும்
சத்தியம் மீறமாட்டேன்..
பாலைத் திணை
------------*
பிரிதல்
ஆசையாய்க் காதல் கொண்டு
உடையவன் இவன் தானென்று
பெற்றோரை உதறிக் கிளம்பிடுவாய்
பட்ட பாடலெல்லாம்
வீணாக்கி சென்றிடுவாய்
ஊரார் வாய்மொழி
உரைப்பது கேட்பாயோ
பெற்றவன் வருந்துவதை
பார்க்கத் தான் நினைப்பாயோ
பருவத்தின் கோளாறிது
பக்குவமாய் சொல்கிறேன்
பணிந்து நடந்திடு
பற்றியவனை விட்டிடு
சுற்றம் சூழ
சீராய் நடந்திடும்
என் அக்கனின் மகனுடன்
உன் திருமணம்
அடங்கி நடந்து கொள்
ஊரார் இகழ்ந்தால்
அப்பன் உயிர் போயிடும்
இது துர்க்கையின் மேல்
சத்தியம் மறவாது
இருந்திடு...
மருதத் திணை
-----------
ஊடல்
காதலை எதிர்த்தும்
காதலனைப் பார்க்க
வயல்தேடி வந்தாளே
வாடிய முகத்துடன் மங்கை
ஏரு பூட்டி
உழவு செய்யும் காதலன்
காண்கிறான் காதலியை
கண்ணோடு தாங்குகிறான்
ஊர் உறங்கும்
இரவில் சொலிக்கும்
நிலவாய் காதல் பூத்திருக்க
நிலவில்லா பகலில்
முகம் வாடி வந்தவளை
மோகமுடன் பார்த்தான்..
கோபம் மேலிட்டு
கக்கினாள் செந்தணலாய்
தந்தையின் வார்த்தையை
கேட்டதும் பதட்டம்
கொள்ளாது கட்டியணைத்து
கலங்காதே காலத்தில்
களம் வருவேன்
மாற்றான் கரத்தை
மரமெனத் துண்டித்து
மங்கல நாண் ஏற்றுவேன்
மணமகனாய் நானே...
இது இந்திரன் மேல் ஆணை...
நெய்தல் திணை
------------*
வருந்துதல்
ஊர்கூடி நிற்கிறது
உற்றவன் மட்டும் காணவில்லை
மாற்றான் ஒருவன்
மணமகனாய் அமர்ந்திருக்க
உடம்பும் கூசுதே
உணர்வும் சாகுதே
உடனே வருவாயோ
உமையவளாய் ஏற்பாயோ
கனக்கிறது நெஞ்சம்
கரை சேர்க்க வா
ரதமேறி வந்துவிடு
ரணத்தை ஆற்றிவிடு
அறியாமல் இருந்தவளிடம்
ஆசை வார்த்தை மொழிந்தாய்
அன்பே என்றாய்
அழகேயென ஆராதித்தாய்
வீழ்ந்தேனே உன் மையலிலே
விழுந்தவள் துடிக்கிறேனே எழாமல்...
விரைந்து மீட்பாய்
வாட்டத்தைப் போக்குவாய்...
வருணன் பொழியும்
மாரி போல்
ஏகமாய் பொழிந்து
ஏக்கத்தை தீர்த்துவிடு...
இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்!
No comments:
Post a Comment