Saturday 29 July 2017

கலாம்

காலை மாற்றி வருங்காலமானாய்..
மாற்றத்தை மனதோடு விதைத்தாய்..
மனிதம் என்பதன் மாண்பானாய்..
விண்ணை முட்டி விரித்தாய்..
அணுவை பிளந்து எறிந்தாய்..
அறிவியலின் அடுத்த நிலைகண்டாய்..
எந்திரங்களோடு இருந்ததால் என்னவோ..
உன்னிதயம் அன்பின் கருவியானது..
நாடாள நல்மனதோடு வந்தாய்..
அன்பெனும் அதிகாரம் செலுத்தினாய்..
மாக்களை மக்களாய் மாற்றினாய்..
எம் மனச்சிறையில் கைதானாய்..
விடுதலை வாங்க மறுத்தாய்..
மாணவனே மாற்றத்தின் சாவியென்றாய்..
எதிர்கால பாரதத்தின் ஏற்றமென்றாய்..
தூங்கவிடா கனவு காணென்றாய்..
கண்டதை கருவாக்கி வாழென்றாய்..



மனிதனாக வாழ ஆசையென்றாய்..
மாணவரிடையில் மரிக்க ஆசையென்றாய்..
ஆசைகளனைத்தையும் அடைந்தும் விட்டாய்..
மதமெனும் மூர்க்கனை மாய்த்தாய்..
சாதியெனும் இழிசொல்லை வேரறுத்தாய்..
கலாமின் காலமும் வந்தது..
எதிர்காலத்துடன் பேசும்பொழுது இறந்தகாலமானாய்..
மனிதராய் வந்தனர் உனைகாண..
பாரதமெனும் மகுடத்தின் அணியான..
காந்திய வைரம் பூமிதனில் புதைந்தது..
காமராசனாய் ராஜ ஒளியுடன் வந்தது..
ராசனும் மண்ணின் மடியை சேர்ந்தான்..
கலாமாய் காலத்தின் ஒளியாய் வந்தீர்..
கலாமும் காலனின் பிடியில்..
இன்னொரு வைரம் ஒளிபெற்று வருகிறது..
நாமம் மாறி ஒருநாள் வெளிப்படும்..
மன்னவா கொஞ்சம் காலம் பொறுத்து வெளிவா..
வைரத்தை வைக்க மணிமுடி வேண்டும்..
எம் மணிமுடி இன்னும் மெருகேறவில்லை..
மாற்றமெனும் பொன்னால் மெருகேற்றுகிறோம்..
மெருகேற்றிய முடியில் குடியேறுவாய்..
பாரெங்கும் பகலவனாய் ஒளியேற்றுவாய்..
அய்யனே ஆணையிடுகிறேன் உன்மேல்..
எம்மக்கள்ளின் மேன்மைக்காக
மண்ணாவேனேயன்றி-ஒருநாளும்
மாக்காளோடு மாக்காளாக மாயமாட்டேன் மண்ணோடு..
இது சத்தியம்...
இவண்..
நின் கனவில் ஒருவன்..
நின் கனவை காண்பவனில் ஒருவன்..
அக்கனவையே காதலிக்கும்..
கனவுகளின் காதலன்...!!!⁠⁠⁠⁠

இக்கவிதை கவிஞர் ரவிசங்கர் பத்மநாதன் அவர்களின் படைப்பாகும்.

#அப்துல் கலாம்

No comments:

Post a Comment

Popular Posts