மீசை முளைக்கா பருவத்தில்
ஆசை முளைத்தது
அரைக்கால் சட்டையில்
அரும்பியதே அக்காதல்
சிவந்த அழகியவள்
சீரான பல் வரிசையும்
மேலுதட்டின் மேல் மச்சமும்
மெருகேறி இருக்கும் உதடும்
கறுத்த கண்மணியும்
கலையான புருவமும்
காண்பவர் வியந்து
கண்கொட்டாமல் பார்க்கும் அழகும்
கண்டு விழுந்தேனே
காதலியாய் வடித்தேனே
பூரண அழகியை
பூரணமாய் ஏற்றனே
நொண்டி விளையாடி
நோக்கியே வருவாள்
கபடி விளையாடி
கரம் தழுவிச் செல்வாள்
முன் இருப்பவள்
பின் நோக்குவாள்
பார்த்து சிரிப்பாள்
பொசுங்கி விழுவேன்
தேறி நிற்பேன்
தேவதையைப் பார்த்தால்
தேய்பிறை போல்
துரும்பாய் இளைப்பேன்
யார் விட்ட சாபமோ
அவளை விட்டுப் பிரிந்தேன்
ஆறாத புண் அது
இன்றும் வலிக்கிறதே
நினைவிலே இருப்பாள்
நித்தமும் வருவாள்
நெகிழும் என் நெஞ்சிற்கு
மருந்தாகும் அவள் சிரிப்பு
வாடிய எந்தன்
வாட்டத்தைப் போக்க
மீண்டும் வந்தாள்
மீள்பதிவாய் என் வாழ்வில்
நான் பேசுவேனென அவளும்
அவள் பேசுவாளென நானும்
நகர்ந்த நிமிடங்கள் வருடமாகயிருந்தது
நானாய் பேசினேன்
நாணம் விட்டு
சுருங்கிச் சிரிக்கும்
சுந்தர விழிகள்
சுண்டி இழுக்குதே
சுகந்தம் போல் இருக்குதே
பேசிப்பேசித் தீராத வார்தைகளும்
பார்க்கச் சலிக்காத
பாவையுன் முகமும்
பறந்து விடுவாயோ என
பயந்தே சொன்னேன்
பாவை உன்னிடம் காதலை...
உணர்ந்தேன் உன்னிடமும்
அதே காதலை
ஏமாற்றாமல் ஏற்றாய் என்னை...
ஊர்கூடிக் கல்யாணம்
உற்றாரும் உறவினரும் வாழ்த்த
அரங்கேறியதே ஆனந்தக்கோலம்..
கூரிய புருவம்
குத்திக் கிழிக்க
இதழ் சேரும் முன்
இமை சேர்ந்தது
உச்சி முகர்ந்தேன்
உடல் ஆசை தொடங்கியது
காதோடு நான் பேசும்
ரகசிய மொழிகளை
களவாடத் துடிக்கும்
காதின் சிமிக்கியையும்
கரம் கோர்க்கா
கடிவாளம் போடும்
கை வளையல்களையும்
உடல் பேசும்
மௌன மொழியை
உலகிற்கு உணர்த்தத்
துடிக்கும் காலின் கொலுசையும்
இரு உயிர்
இணைய இடைஞ்சலாய்
இருக்கும் அனைத்தையும்
களைந்திடுவோம்
உயிரும் உடலும்
ஒரு சேரயிணையட்டும்
எழுத்தால் வடிக்க முடியாத
எண்ணற்ற செய்கைகளை
காலத்தில் மறவாத
காதலின் உயிர்ப்புகளை
சேர்ந்தே பருகுவோம்
புரிந்தே புணர்வோம்
காதற் காமத்தை
சேர்ந்தே பெறுவோம்!
இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்.
ஆசை முளைத்தது
அரைக்கால் சட்டையில்
அரும்பியதே அக்காதல்
சிவந்த அழகியவள்
சீரான பல் வரிசையும்
மேலுதட்டின் மேல் மச்சமும்
மெருகேறி இருக்கும் உதடும்
கறுத்த கண்மணியும்
கலையான புருவமும்
காண்பவர் வியந்து
கண்கொட்டாமல் பார்க்கும் அழகும்
கண்டு விழுந்தேனே
காதலியாய் வடித்தேனே
பூரண அழகியை
பூரணமாய் ஏற்றனே
நொண்டி விளையாடி
நோக்கியே வருவாள்
கபடி விளையாடி
கரம் தழுவிச் செல்வாள்
முன் இருப்பவள்
பின் நோக்குவாள்
பார்த்து சிரிப்பாள்
பொசுங்கி விழுவேன்
தேறி நிற்பேன்
தேவதையைப் பார்த்தால்
தேய்பிறை போல்
துரும்பாய் இளைப்பேன்
யார் விட்ட சாபமோ
அவளை விட்டுப் பிரிந்தேன்
ஆறாத புண் அது
இன்றும் வலிக்கிறதே
நினைவிலே இருப்பாள்
நித்தமும் வருவாள்
நெகிழும் என் நெஞ்சிற்கு
மருந்தாகும் அவள் சிரிப்பு
வாடிய எந்தன்
வாட்டத்தைப் போக்க
மீண்டும் வந்தாள்
மீள்பதிவாய் என் வாழ்வில்
நான் பேசுவேனென அவளும்
அவள் பேசுவாளென நானும்
நகர்ந்த நிமிடங்கள் வருடமாகயிருந்தது
நானாய் பேசினேன்
நாணம் விட்டு
சுருங்கிச் சிரிக்கும்
சுந்தர விழிகள்
சுண்டி இழுக்குதே
சுகந்தம் போல் இருக்குதே
பேசிப்பேசித் தீராத வார்தைகளும்
பார்க்கச் சலிக்காத
பாவையுன் முகமும்
பறந்து விடுவாயோ என
பயந்தே சொன்னேன்
பாவை உன்னிடம் காதலை...
உணர்ந்தேன் உன்னிடமும்
அதே காதலை
ஏமாற்றாமல் ஏற்றாய் என்னை...
ஊர்கூடிக் கல்யாணம்
உற்றாரும் உறவினரும் வாழ்த்த
அரங்கேறியதே ஆனந்தக்கோலம்..
கூரிய புருவம்
குத்திக் கிழிக்க
இதழ் சேரும் முன்
இமை சேர்ந்தது
உச்சி முகர்ந்தேன்
உடல் ஆசை தொடங்கியது
காதோடு நான் பேசும்
ரகசிய மொழிகளை
களவாடத் துடிக்கும்
காதின் சிமிக்கியையும்
கரம் கோர்க்கா
கடிவாளம் போடும்
கை வளையல்களையும்
உடல் பேசும்
மௌன மொழியை
உலகிற்கு உணர்த்தத்
துடிக்கும் காலின் கொலுசையும்
இரு உயிர்
இணைய இடைஞ்சலாய்
இருக்கும் அனைத்தையும்
களைந்திடுவோம்
உயிரும் உடலும்
ஒரு சேரயிணையட்டும்
எழுத்தால் வடிக்க முடியாத
எண்ணற்ற செய்கைகளை
காலத்தில் மறவாத
காதலின் உயிர்ப்புகளை
சேர்ந்தே பருகுவோம்
புரிந்தே புணர்வோம்
காதற் காமத்தை
சேர்ந்தே பெறுவோம்!
இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்.
No comments:
Post a Comment