Friday 5 January 2018

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 | ஆய்வுக் கட்டுரைகள் கோரல்

உலகத் தமிழ் மரபு மாநாடு மிகச்சிறந்த முறையில் உருவாகி வருகிறது. உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்கள் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். எஸ்.எஸ்.எம். தமிழ் மரபு மையம், உலக அளவில் இயங்கிவரும் தமிழ் அமைப்பான தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடைபெறும் இந்த மாநாட்டில் "தமிழ் மொழியும் தமிழர் தம் வாழ்வியலும்" என்ற பொருண்மையில் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட உள்ளது.
 
 
 
தமிழின் தொன்மைகளை உலகெங்கும் கொண்டு செல்ல இந்த மாநாடு உதவும் என்றே நம்புகிறோம். உங்கள் அனைவரின் வருகை மற்றும் பங்களிப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். உலக அளவில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைத்து அறிஞர் பெருமக்களும் வருகை தர உள்ளனர். 

ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வு நூல் வெளியிடப் பட உள்ளது. ஆய்வுக்கோவைக்காக கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாளாக ஜனவரி 15,16ல் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு கீழ்க்கண்ட முகவரியை பயன்படுத்துக.

நன்றி
உலக தமிழ் மரபு மாநாட்டுக் குழு.

தொடர்புக்கு:
மின்னஞ்சல்



தமிழ் ஆர்வம் கொண்ட அனைவரும் பங்கேற்கலாம். ஆய்வுக் கட்டுரைகளும் வழங்கலாம். நண்பர்கள் பகிரலாம். தலைப்புகள் அவரவர் விருப்பம். ஒரே நிபந்தனை அவை தமிழ் மரபு மற்றும் தொன்மம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

ஆய்வுக்கட்டுரை அனுப்பும் ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவருக்கும் (இந்தியா) கட்டணம் ரூபாய் - 1000 மட்டுமே.

கட்டணத்தைபின்வருமாறு வைப்பிலிடலாம்.

ACCOUNT : SSM TAMIL MARABU ARAKKATTALAI
ACC.NO : 087600101151401
BANK : CORPORATION BANK
BRANCH : KOMARAPALAYAM
IFSC CODE : CORP 0000876
MICR CODE : 638017004
என்ற வங்கிக் கணக்கிலோ, SSM TAMIL MARABU ARAKKATTALAI என்ற பெயரில் குமார பாளையத்தில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாகவோ அல்லது பண அஞ்சலிலோ ( MONEY ORDER ) அனுப்பலாம்.

கட்டுரைகள் 4 பக்கங்களுக்கு மிகாமல் பாமினி அல்லது UNICODE எழுத்துருவில் worldtamilheritageconference18@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஜனவரி 16க்குள் அனுப்பி வைக்கவும்.

 

No comments:

Post a Comment

Popular Posts