Tuesday 23 January 2018

மேகராகம்

மழையின் மோகங்கள் யாரறிவார் - இந்த
மங்கையின் மனம்தனை யாரறிவார்



சிந்திய கண்ணீர் முத்துக்களை நான்
சேர்த்தெடுத்தோர் மாலை கட்டிவைத்தேன்
சீறும் அலைகளின் சீற்றத்தினை அதில்
சிப்பிகளாய் நானும் இட்டு வைத்தேன் - மோகக்

கருமேகங்கள் கலைந்தோர் கணத்தினில்
பெருமழை யாய்வீழ்ந்து பொழிந்திடுமே - அன்று
பேரிடியாய் மனதின் ஆசைக ளெல்லாம்
வீழ்ந்திடப் புவியே கலங்கிடுமே !

-கி.பாலாஜி
29.10.2017
சரஸ்வதி பூஜை தினம்

#sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி 

மேகராகம் - சிகரம் 

மேகராகம்     
https://www.sigaram.co/preview.php?n_id=263&code=XIsLcwYo    
பதிவர் : கி.பாலாஜி
#sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி

No comments:

Post a Comment

Popular Posts