மீண்டெழும் கடலே
முகிலற்ற வானே
முடிந்துவிடா வான்விளக்கே
எம் ஆலகண்டனுக்கு நன்றிகளை
சேர்ப்பியுங்கள் இந்நாளிலும்.
எழுத்தறிவித்தாய்
எம் சுயம் இயற்றிட்டாய்
கொடிகொண்டு படைகாத்து
பாடல்பெற்ற என் மண்
அமைத்திட்டாய்
கரிகாலா
அத்தனையும் துரோகமாகி
தூசுஎன போகையில் துயர்
தாங்க என்செய்தாய்_இனி
யார் வந்து போனாலும்
எதுசொல்லிப்போனாலும்
உள் ஆடும் ஒரு தீபம் நீயல்லோ_எமக்கு
உனை போல இனியொருவன்
இல்லையெல்லோ...
இக்கவிதை அதிசயா (லக்ஷி நாகேஸ்வரன்) அவர்கள் பேஸ்புக்கில் வெளியிட்ட படைப்பாகும்.
இனியொருவன் - அதிசயா - பேஸ்புக் பதிவு
-அதிசயா
இனியொருவன் - அதிசயா - சிகரம்
No comments:
Post a Comment