Friday 3 November 2017

தமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும்...?

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது.

இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாக தெரிந்து கொண்டு பின்னர் ஆங்கிலத்தை படியுங்கள்.



ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? காரணம், தமிழ் மீதான ஒரு அருவருப்பு தமிழனுக்குள்ளேயே விதைக்கப்பட்டிருக்கிறது. உலகின் எல்லா நாடுகளிலும், அதன் வரலாற்றிலும் ஒரு இனம் அதன் மொழியால் தான் அடையாளப்படுத்தபடுகிறது. தமிழுக்காக போராட வேண்டாம், வீட்டில் தமிழில் பேசுங்கள் போதும். அது தான் தமிழை வளர்க்கும். ஆரியம், இங்கிலாந்து என எத்தனையோ படையெடுப்பைத் தாண்டி வாழ்ந்த தமிழ் இன்று தமிழனாலே மாண்டு விடுமோ? உலகிலேயே ஆங்கிலத்தை மிகச் சரியாக உச்சரிப்பவர்களும் தமிழர் தான், தன் தாய் மொழி குறித்த அடிப்படை அறிவு பெறாதவர்களும் தமிழர் தான். இது பெருமை படக் கூடிய விசயமா? 



இன்னைக்கு ஆங்கிலத்தில் பெரும் புலமை அடைந்துவிட்டோம். விருதுகள் கூட வழங்கிக் கொள்ளலாம். ஆனால் தமிழில் பிழை இல்லாமல் எத்தனை பேருக்கு எழுதத் தெரிந்திருக்கிறது? குறைந்த பட்சம் தமிழில் எத்தனை பேர் தன் கையெழுத்து இடுகின்றனர் ?

ஆங்கிலம் அவசியம். ஆனால் தமிழ் நம் அடையாளம்....

உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன் பார்த்துப் பார்த்து செதுக்கிய தமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும்...?

கொஞ்சம் சிந்தியுங்கள்

#தமிழ்
#ஆதிமொழியாகவேண்டுமா ! அல்லது #அழியாமொழியாகவேண்டுமா !
ஆதி மொழி தமிழ் தான் என்பதற்கு இன்றும் பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.ஆனால் அழியா மொழியாவது நம் கையில் தான் இருக்கிறது...

இப்பதிவு ந.விஜயராகவன் அவர்களால் பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பதிவு ஆகும். பதிவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!


1 comment:

  1. மிக மிக அருமையான பதிவு. உண்மை! என்று எண்ண ஓட்டங்களை அப்படியே பிரதிபலித்திருப்பதைக் காண்கையில் ஒரு மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

Popular Posts