இலங்கை-யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்ட '1000 கவிஞர்கள் 1000 கவிதைகள்' என்ற பெருநூலில் எனது "திருநங்கைகள்" என்ற கவிதை வெளியாகியுள்ளது. எனது கவிதையை வெளியிட்ட யோ.புரட்சி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
திருநங்கைகள்
உரு மாறியதால்
உறுப்பறுத்து வாழும்
கடவுளின் பிள்ளைகள் !
உறுப்பறுத்து வாழும்
கடவுளின் பிள்ளைகள் !
வரதட்சணை
வாங்கி வாழாத
வானம்பாடிகள் !
வாங்கி வாழாத
வானம்பாடிகள் !
வனம் அழித்து
மலை உடைத்து
வயல் மறைத்து
மனை பிரித்து வாழா
மரகத கற்கள் !
மலை உடைத்து
வயல் மறைத்து
மனை பிரித்து வாழா
மரகத கற்கள் !
அரசு சொத்துக்களை
அபகரித்து வாழா
அன்னப்பறவைகள் !
அபகரித்து வாழா
அன்னப்பறவைகள் !
கணிமவளங்களை
கொள்ளையடித்து வாழா
கோமேதகங்கள்!
கொள்ளையடித்து வாழா
கோமேதகங்கள்!
ஊர் கொளுத்தி
காதல் பி(எ )ரிக்கா
வேடந்தாங்கல்கள் !
காதல் பி(எ )ரிக்கா
வேடந்தாங்கல்கள் !
குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடா
குடும்பவிளக்குகள் !
வாழ்வு தேடிடா
குடும்பவிளக்குகள் !
எல்லா துறைகளிலும்
கோலோச்சி கொண்டிருக்கும்
கோவில் கோபுரங்கள் !
கோலோச்சி கொண்டிருக்கும்
கோவில் கோபுரங்கள் !
எதிர்கால உலகை
ஆளப்போகும்
எட்டாவது
உலக அதிசயங்கள்!
ஆளப்போகும்
எட்டாவது
உலக அதிசயங்கள்!
இக்கவிதை கவிஞர் ம.சக்திவேல் அவர்களின் படைப்பாகும். இக்கவிதை 1000 கவிஞர்கள் 1000 கவிதைகள் என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்று ம.சக்திவேல் அவர்களால் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
திருநங்கைகள் - கவிஞர் ம.சக்திவேல்
திருநங்கைகள் - கவிஞர் ம.சக்திவேல்
No comments:
Post a Comment