அம்மா' என்றொரு
அற்புதக் களஞ்சியம் ! இன்று நான்
அலறி அழைத்தாலும் வாராத, மனதில்
ஆறாத காயமாய்
அருகி நின்றுவிட்ட நினைவுப் பெட்டகம் !
காலச் சுவடுகளாய் நிலைத்து
நின்றுவிட்ட அம்மா என்றவொரு
அற்புத நினைவு !
ஆறாத வடுவாக ஆனாலும்
மனதில்
அன்பாக வருடும்
அற்புத நினைவு ! இனிமைக்கு
இனிமை கூட்டும்
இதயத்தைத் தாலாட்டும்
இன்னிசை மழையாய் என்றைக்கும்
உள்நிலைக்கும் அம்மா என்றவொரு
அற்புத நினைவு !
அம்மா என்றொரு அற்புதம் !
அம்மா என்றும்
அற்புதம் !
கவிஞர் : கி.பாலாஜி - 08.05.2016 - இக்கவிதை பாலாஜி அவர்களின் வலைத்தளத்திலும் வெளியாகியுள்ளது.
அம்மா என்றொரு அற்புதம் ! - பாலாஜி - சிகரம்
அற்புதக் களஞ்சியம் ! இன்று நான்
அலறி அழைத்தாலும் வாராத, மனதில்
ஆறாத காயமாய்
அருகி நின்றுவிட்ட நினைவுப் பெட்டகம் !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo37wL9ibzi-Yl4fEfByfZOMkKx0amzXuAfxf41Gsjw-psOuB8KT6bEFare8PiTf0kL-so-Gmy9iAWu12rTrVhEp0A-e-FOYYYChh2RyydccurgLsW8jKRjnmvWjz7vCgWPyxLgzuAUNd3/s320/amma.jpg)
காலச் சுவடுகளாய் நிலைத்து
நின்றுவிட்ட அம்மா என்றவொரு
அற்புத நினைவு !
ஆறாத வடுவாக ஆனாலும்
மனதில்
அன்பாக வருடும்
அற்புத நினைவு ! இனிமைக்கு
இனிமை கூட்டும்
இதயத்தைத் தாலாட்டும்
இன்னிசை மழையாய் என்றைக்கும்
உள்நிலைக்கும் அம்மா என்றவொரு
அற்புத நினைவு !
அம்மா என்றொரு அற்புதம் !
அம்மா என்றும்
அற்புதம் !
கவிஞர் : கி.பாலாஜி - 08.05.2016 - இக்கவிதை பாலாஜி அவர்களின் வலைத்தளத்திலும் வெளியாகியுள்ளது.
அம்மா என்றொரு அற்புதம் ! - பாலாஜி - சிகரம்
No comments:
Post a Comment