Wednesday 22 November 2017

அம்மா என்றொரு அற்புதம் !

அம்மா' என்றொரு
அற்புதக் களஞ்சியம் ! இன்று நான்
அலறி அழைத்தாலும் வாராத, மனதில்
ஆறாத காயமாய்
அருகி நின்றுவிட்ட நினைவுப் பெட்டகம் !




காலச் சுவடுகளாய் நிலைத்து
நின்றுவிட்ட அம்மா என்றவொரு
அற்புத நினைவு !
ஆறாத வடுவாக ஆனாலும்
மனதில்
அன்பாக வருடும்
அற்புத நினைவு ! இனிமைக்கு
இனிமை கூட்டும்
இதயத்தைத் தாலாட்டும்
இன்னிசை மழையாய் என்றைக்கும்
உள்நிலைக்கும் அம்மா என்றவொரு
அற்புத நினைவு !


அம்மா என்றொரு அற்புதம் !
அம்மா என்றும்
அற்புதம் !


கவிஞர் : கி.பாலாஜி - 08.05.2016 - இக்கவிதை பாலாஜி அவர்களின் வலைத்தளத்திலும் வெளியாகியுள்ளது.

அம்மா என்றொரு அற்புதம் ! - பாலாஜி - சிகரம் 
 

No comments:

Post a Comment

Popular Posts