Tuesday 18 April 2017

விதியின் பிழையதுவோ?

திடுமென எனை
 தீண்டும் பாலைவன
தென்றலென என்னில்
 வந்தாய்!

சோலைவன
 மானதென்றே வாழ்வு!
நெஞ்சகத்து கர்வம்
   கொண்டு குளிர்மதி
 யெனவே நானிருந்தேன்!

வஞ்சிப்பார் யாருமில்லை!
வாழ்வதுவோ
 துவங்கவில்லை;
நெஞ்சுறைக்க நீயுரைத்த
வார்த்தைகளி னீரம்
 காயவில்லை
அஃதிருக்க....

 அன்பென்றே ஆசை
 கொண்டு; அணுவணுவும்
  உனை நினைந்து!
முன்பிருந்த சோகமதோ முற்றிலுமாய் தான்தேய!

இச்சகத்தில் இச்சை
 கொண்டு இன்புற்றி
ருந்த வேளையிலே!
வசையில் நாண்
தொடுத்து!
நெஞ்சகத்தை நீ
துளைத்து;
வஞ்சகனாய் சித்தரித்து;
வார்த்தைகளை
 வீசிவிட்டாய்!

ஒரு கணமும்;
எனை பிரியின்
 உயிர்பிரியும் என
உரைத்த நீ இன்றோ!
உனை பிரிந்து
நான் வாட எனை
 மறந்தே நீ வாழ!
விதி செய்த
 பிழையெனவே!
கண்ணம்மா!
மதிமறந்து
 வாடுகின்றேன்.....

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்!

1 comment:

  1. உணர்வு மிக்க வரிகள் ! அருமை!

    ReplyDelete

Popular Posts