திடுமென எனை
தீண்டும் பாலைவன
தென்றலென என்னில்
வந்தாய்!
சோலைவன
மானதென்றே வாழ்வு!
நெஞ்சகத்து கர்வம்
கொண்டு குளிர்மதி
யெனவே நானிருந்தேன்!
வஞ்சிப்பார் யாருமில்லை!
வாழ்வதுவோ
துவங்கவில்லை;
நெஞ்சுறைக்க நீயுரைத்த
வார்த்தைகளி னீரம்
காயவில்லை
அஃதிருக்க....
அன்பென்றே ஆசை
கொண்டு; அணுவணுவும்
உனை நினைந்து!
முன்பிருந்த சோகமதோ முற்றிலுமாய் தான்தேய!
இச்சகத்தில் இச்சை
கொண்டு இன்புற்றி
ருந்த வேளையிலே!
வசையில் நாண்
தொடுத்து!
நெஞ்சகத்தை நீ
துளைத்து;
வஞ்சகனாய் சித்தரித்து;
வார்த்தைகளை
வீசிவிட்டாய்!
ஒரு கணமும்;
எனை பிரியின்
உயிர்பிரியும் என
உரைத்த நீ இன்றோ!
உனை பிரிந்து
நான் வாட எனை
மறந்தே நீ வாழ!
விதி செய்த
பிழையெனவே!
கண்ணம்மா!
மதிமறந்து
வாடுகின்றேன்.....
தீண்டும் பாலைவன
தென்றலென என்னில்
வந்தாய்!
சோலைவன
மானதென்றே வாழ்வு!
நெஞ்சகத்து கர்வம்
கொண்டு குளிர்மதி
யெனவே நானிருந்தேன்!
வஞ்சிப்பார் யாருமில்லை!
வாழ்வதுவோ
துவங்கவில்லை;
நெஞ்சுறைக்க நீயுரைத்த
வார்த்தைகளி னீரம்
காயவில்லை
அஃதிருக்க....
அன்பென்றே ஆசை
கொண்டு; அணுவணுவும்
உனை நினைந்து!
முன்பிருந்த சோகமதோ முற்றிலுமாய் தான்தேய!
இச்சகத்தில் இச்சை
கொண்டு இன்புற்றி
ருந்த வேளையிலே!
வசையில் நாண்
தொடுத்து!
நெஞ்சகத்தை நீ
துளைத்து;
வஞ்சகனாய் சித்தரித்து;
வார்த்தைகளை
வீசிவிட்டாய்!
ஒரு கணமும்;
எனை பிரியின்
உயிர்பிரியும் என
உரைத்த நீ இன்றோ!
உனை பிரிந்து
நான் வாட எனை
மறந்தே நீ வாழ!
விதி செய்த
பிழையெனவே!
கண்ணம்மா!
மதிமறந்து
வாடுகின்றேன்.....
இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்!
உணர்வு மிக்க வரிகள் ! அருமை!
ReplyDelete