Wednesday 19 April 2017

நீ ஒருத்தி மட்டும் தானே !

நீ ஒருத்தி மட்டும் தானே !

உனக்குத் தெரியாது
நான் யாரென்றோ, 
யாராக வளர்வேன் என்றோ !

ஆனால்,
உனது கருப்பையில்
சுருண்டு கிடந்த போதே
நானறிவேன் அல்லவா 
நீதான் என் தாய் என்று ! 

உனது வேண்டுதல்கள்,
உனது முணுமுணுத்தல்கள்,
இவை அனைத்தும்
உறங்காமல்
கண்களை மூடிக்கொண்டு
கிடந்த என்னை
எத்தனை வருத்தின என்று
நீ அறிய மாட்டாய் ! 
ஏமாற்றியது 
நானில்லையே தாயே ! 
உன்னை நீயே அன்றோ 
ஏமாற்றிக் கொண்டாய் !

கழிவிடங்களின் பாதைகளிலோ,
கடவுளர்களின் திருவிடங்களிலோ,
நடை பாதையிலோ,
என்னை விட்டு மறந்து,
ஒரு பத்து ரூபாய் காசுக்குப்,
'பெற்ற மகனை விற்ற அன்னை'
என்று பெயரெடுத்த உன்மேல்,
எனக்கு என்றும் வெறுப்பில்லை ! 

உனக்கு இனிமேல்
வேறுகுழந்தைகள்
பிறக்கலாம் ! 
ஆனால்
எனக்குத் தாயாய்...
நீ ஒருத்தி தானே
அம்மா  !
நீ ஒருத்தி மட்டும் தானே !
(கி.பாலாஜி      August 21 2014)


-------------------------------------------------------------------------------------------------------------------
மூலப் பதிப்பு மலையாளத்தில் : 

അനാഥന്‍ ;-

 നിനക്കറിയില്ല , ഞാനാരെന്നോ ആരാകുമെന്നോ , 
എനിയ്ക്ക് പക്ഷെ , നിന്റെ ഗര്‍ ഭപാത്രത്തില്‍ 
ചുരുണ്ടുങ്ങുമ്പോഴും , അറിയാമായിരുന്നു , 
എന്റെ അമ്മയെന്ന് ..;


ദൈവത്തോടുള്ള നിന്റെ പ്രാര്‍ ഥനകള്‍ , 
സ്വയം പിറുപിറുക്കലുകള്‍ , 
ഉറങ്ങാതെ , കണ്ണുകളടച്ചു കിടന്നെന്നെ 
കരയിപ്പിച്ചിരുന്നു , 
ചതിച്ചത് , ഞാനല്ലല്ലോ അമ്മേ , 
നീ നിന്നെ തന്നെ അല്ലെ ..?

ക്ലോസറ്റില്‍ . 
വഴിയരുകില്‍ , 
ആരാധനാലയങ്ങളുടെ മുന്നില്‍ ,
പ്ലാറ്റ് ഫോമുകളില്‍ , 
പത്ത് രൂപ കാശിനു , 
നീ എന്നെ മറന്നിട്ടും , 
എനിയ്ക്ക് വെറുപ്പില്ല ...


നിനക്കിനിയും കുഞ്ഞുങ്ങളുണ്ടായേക്കാം ,
എനിയ്ക്കമ്മയായി നീ മാത്രമല്ലെ ഉള്ളൂ..!

By
Sajayan Elanad

இக்கவிதை கவிஞர் கி.பாலாஜி அவர்களின் மொழியாக்கக் கவிதை ஆகும்!

No comments:

Post a Comment

Popular Posts