அவிழ்ந்தது
உழவனின் உடையல்ல-நம்
அனைவரின் ஆடை...
நிர்வாணமாய்
நின்றது நிலக்கிழானல்ல
நீயும் நானும்...
பட்டினிப்போர்
படோபமாய் வாழ்வதற்கல்ல-நம்
பிள்ளைகள் பட்டினி போக்கிட.
அவன்
குடல் பசி பொறுப்பது-வரும்
குலம் பசியின்றி வாழ்ந்திட
கேட்பது
யாசகமும் அல்ல-நிற்பது
யாசகனும் அல்ல,
அரசே
குடிகாப்பதுன் கடமை-அவன்
கும்பி கொதித்தால் அதில்-நீ
தீய்வது உண்மை
மக்களே
விளைநிலங்களை - நாம்
விலைநிலங்களாய் பார்த்தால் வந்த நிலை- அவனுக்கு...
இனி
காய்கனிகளை கடைத்தெருவில் தேடாதே
குடியானவன் குடிசையில் தேடு.
அவன்
பிள்ளைக்கு -அவனே
பெயர்வைக்கட்டும்
அவன்
விளைச்சலுக்கு -அவனே
விலை வைக்கட்டும்!
இக்கவிதை கவிஞர் முனீஸ்வரன் அவர்களின் படைப்பாகும்!
உழவனின் உடையல்ல-நம்
அனைவரின் ஆடை...
நிர்வாணமாய்
நின்றது நிலக்கிழானல்ல
நீயும் நானும்...
பட்டினிப்போர்
படோபமாய் வாழ்வதற்கல்ல-நம்
பிள்ளைகள் பட்டினி போக்கிட.
அவன்
குடல் பசி பொறுப்பது-வரும்
குலம் பசியின்றி வாழ்ந்திட
கேட்பது
யாசகமும் அல்ல-நிற்பது
யாசகனும் அல்ல,
அரசே
குடிகாப்பதுன் கடமை-அவன்
கும்பி கொதித்தால் அதில்-நீ
தீய்வது உண்மை
மக்களே
விளைநிலங்களை - நாம்
விலைநிலங்களாய் பார்த்தால் வந்த நிலை- அவனுக்கு...
இனி
காய்கனிகளை கடைத்தெருவில் தேடாதே
குடியானவன் குடிசையில் தேடு.
அவன்
பிள்ளைக்கு -அவனே
பெயர்வைக்கட்டும்
அவன்
விளைச்சலுக்கு -அவனே
விலை வைக்கட்டும்!
இக்கவிதை கவிஞர் முனீஸ்வரன் அவர்களின் படைப்பாகும்!
No comments:
Post a Comment