Wednesday 26 April 2017

உழவு!

அவிழ்ந்தது

உழவனின் உடையல்ல-நம்
அனைவரின் ஆடை...

நிர்வாணமாய்

நின்றது நிலக்கிழானல்ல
நீயும் நானும்...

பட்டினிப்போர்

படோபமாய் வாழ்வதற்கல்ல-நம்
பிள்ளைகள் பட்டினி போக்கிட.

அவன்

குடல் பசி பொறுப்பது-வரும்
குலம் பசியின்றி வாழ்ந்திட

கேட்பது

யாசகமும் அல்ல-நிற்பது
யாசகனும் அல்ல,

அரசே
குடிகாப்பதுன் கடமை-அவன்
கும்பி கொதித்தால் அதில்-நீ
தீய்வது உண்மை

மக்களே

விளைநிலங்களை - நாம்
விலைநிலங்களாய் பார்த்தால் வந்த நிலை- அவனுக்கு...

இனி

காய்கனிகளை கடைத்தெருவில் தேடாதே
குடியானவன் குடிசையில்  தேடு.

அவன்
பிள்ளைக்கு -அவனே
பெயர்வைக்கட்டும்

அவன்
விளைச்சலுக்கு -அவனே
விலை வைக்கட்டும்!

இக்கவிதை கவிஞர் முனீஸ்வரன் அவர்களின் படைப்பாகும்!

No comments:

Post a Comment

Popular Posts