Thursday 27 April 2017

காதலெனும் கடலிலே

நீண்ட வானம்
நீளும் இரவுகள்
அகண்ட வெளி
ஆளில்லாத் தீவு

விழி விரித்த
விண்மீன்கள்
பாதம்படாத கடற்கரை
பதித்திடுவோம் பாதத்தை

அலையின் ஓசைகள்
அசைந்தாடும் தென்னைகள்
தாலாட்டும் நித்தமும்
தனித்தே வாழ்ந்திடுவோம் தரணியில்

படபடக்கும் பட்டாம்பூச்சிகள்
புல்லின் மேல் பனித்துளிகள்
படர்ந்தே கிடப்போம்
உறவுகளுடன் இணைவோம்

காலைத்தடவும் அலைகள்
காணக் கிடைக்க வரங்கள்
இயற்கையுடன் இணைவோம்
இசைந்தே வாழ்வோம்

கரம்கோர்த்த நடைகள்
கடற்கரையை அளந்திடும்
இருகரம் பிணைந்தே
இருவுடலை இணைப்போம்

தீராத தாகம்
தீர்த்திடும் விழிகள்
இணைந்த உடல்கள்
ஒற்றை உயிராய் காதல்

உயிரில் நிறைந்திடும்
உண்மைக் காதலை
பிரியாமல் நாளும்
பொத்தியே வைப்போம்
ஆழ்கடலில்

காதலெனும் கடலில்
கலந்திடுவோம் நாளும்
கற்கால வாழ்க்கைக்கு
திரும்பிடுவோம் நாமும்..

காதலை உயிர்ப்பித்து
காதலாய் வாழ்ந்து
காதலில் நிறைந்து
காதலாய் கரைவோம்...


இக்கவிதை கவிஞர்  சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்!

No comments:

Post a Comment

Popular Posts