அன்று
கொலுபிடித்து எனைவருடி
இலைதழைகளை உணவாக்கி
உரமாக்கி விதையிட்டாய்;
ஆநிரைகள் எனைமிதித்து
அதன் கழிவுகளால்
வலுவேற்றி பயிரிட்டாய்;
நோய் நீங்க நீ புகட்டிய
அருமருந்தை நாணுண்டு
தாய்தமிழ்போல் நீ தழைத்து
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
நற்தானியங்கள் நான்கொடுத்தேன்!
இன்று,
இயந்திரத்தால் எனைக்கிழித்து
விடந் தெளித்து, என்னுடலில்
உரமேற்றி நோய்கொண்டு
என் தாய்குணம் மறைந்து
மக்கி மலடாகி
நோய்கொண்டு
நானெழுந்து தானியங்கள் தருகின்றேன்;
எனை நீயும் உண்டபின்பு,
எதை உண்டு, உழுது
வாழ்வாயோ-ஐயகோ!
என்னுடலின் கருப்பையில்
பசுங்குருதி கொட்டுதடா-எனை
காக்க கூறவில்லை;
உனை காக்க கூறுகிறேன்;
இயந்திரத்தை தான்விடுத்து
இயற்கைக்கு மாறிடடா!
உழவா-உன் இனம் அதனைக்
காத்திடடா..!
கவின்மொழிவர்மன்…
இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களால் 03.14.2017 அன்று 'மின்னல் கீற்றுகள்' வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கவிஞரின் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.
கொலுபிடித்து எனைவருடி
இலைதழைகளை உணவாக்கி
உரமாக்கி விதையிட்டாய்;
ஆநிரைகள் எனைமிதித்து
அதன் கழிவுகளால்
வலுவேற்றி பயிரிட்டாய்;
நோய் நீங்க நீ புகட்டிய
அருமருந்தை நாணுண்டு
தாய்தமிழ்போல் நீ தழைத்து
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
நற்தானியங்கள் நான்கொடுத்தேன்!
இன்று,
இயந்திரத்தால் எனைக்கிழித்து
விடந் தெளித்து, என்னுடலில்
உரமேற்றி நோய்கொண்டு
என் தாய்குணம் மறைந்து
மக்கி மலடாகி
நோய்கொண்டு
நானெழுந்து தானியங்கள் தருகின்றேன்;
எனை நீயும் உண்டபின்பு,
எதை உண்டு, உழுது
வாழ்வாயோ-ஐயகோ!
என்னுடலின் கருப்பையில்
பசுங்குருதி கொட்டுதடா-எனை
காக்க கூறவில்லை;
உனை காக்க கூறுகிறேன்;
இயந்திரத்தை தான்விடுத்து
இயற்கைக்கு மாறிடடா!
உழவா-உன் இனம் அதனைக்
காத்திடடா..!
கவின்மொழிவர்மன்…
இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களால் 03.14.2017 அன்று 'மின்னல் கீற்றுகள்' வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கவிஞரின் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment