Monday 17 April 2017

விடம் தவிர்!

அன்று

கொலுபிடித்து எனைவருடி
இலைதழைகளை உணவாக்கி
உரமாக்கி விதையிட்டாய்;

ஆநிரைகள் எனைமிதித்து
அதன் கழிவுகளால்
வலுவேற்றி பயிரிட்டாய்;
நோய் நீங்க நீ புகட்டிய
அருமருந்தை நாணுண்டு

தாய்தமிழ்போல் நீ தழைத்து
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
நற்தானியங்கள் நான்கொடுத்தேன்!

இன்று,

இயந்திரத்தால் எனைக்கிழித்து
விடந் தெளித்து, என்னுடலில்
உரமேற்றி நோய்கொண்டு
என் தாய்குணம் மறைந்து
மக்கி மலடாகி

நோய்கொண்டு
நானெழுந்து தானியங்கள் தருகின்றேன்;

எனை நீயும் உண்டபின்பு,
எதை உண்டு, உழுது
வாழ்வாயோ-ஐயகோ!

என்னுடலின் கருப்பையில்
பசுங்குருதி கொட்டுதடா-எனை
காக்க கூறவில்லை;
உனை காக்க கூறுகிறேன்;

இயந்திரத்தை தான்விடுத்து
இயற்கைக்கு மாறிடடா!
உழவா-உன் இனம் அதனைக்
காத்திடடா..!

கவின்மொழிவர்மன்…

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களால் 03.14.2017 அன்று 'மின்னல் கீற்றுகள்' வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கவிஞரின் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Posts