பணம்,பணம்,பணம்!!
அட
பணம்,பணம்,பணம்!!
பெத்தவனிங்கே
காசு கேட்குறான்!
பெத்ததைகூட
காசா பாக்குறான்!
பாசமும் இங்கே
வேசம்தானாடா!
காசு செய்கின்ற
வேலைதானடா!
(பணம்)
கல்விக்குகூட
காசு கேட்குறான்!
கற்பதைகூட
காசா பாக்குறான்!
தாயும் சிலநாள்
சோறுபோடுவா!
காசு இல்லேனா
கூறுபோடுவா!
(பணம்)
பிறக்கவும்
இங்கே காசு
கேக்குறான்!
அட
பிணத்திலும்கூட
நெற்றி காசே
தேடுறான்!
கழிவினில் கூட
காசப்
பார்த்திட்டா
அட
கதறியே ஓடி
தேடி எடுக்கிறான்!
(பணம்)
காதலும்
இங்கே மாறி
போச்சுது!
காசு
செய்கின்ற
வேலையாச்சுது!
கற்பும்கூட
கனவா
போகுது!
காசு இருந்தா
மாசு
ஆக்குது!
(பணம்)
பண்பாடு
இங்கே
பரிதவிக்குது;
படைத்தவன்
மனமோ
துடிதுடிக்குது!
படைத்தவனோடு
போட்டி
போடுமோ!
கடவுளே;
உன்னை
அடிமையாக்கி
ஆட்டம் போடுமோ!
(பணம்)
கடவுளை
பார்க்கவும்
காசு கேட்கிறான்;
அட
கவலையை
மறக்கவும் காசு
கேட்கிறான்!
இதை
பார்த்து,பார்த்து
தினம்
சிரிக்கிறான்!
பரமன்;
பாரினில்
வந்தால் ;
அவனும் காசே
கடவுளாய்
உருகி
வேண்டுவான்!
(பணம்)
இது கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்.
அட
பணம்,பணம்,பணம்!!
பெத்தவனிங்கே
காசு கேட்குறான்!
பெத்ததைகூட
காசா பாக்குறான்!
பாசமும் இங்கே
வேசம்தானாடா!
காசு செய்கின்ற
வேலைதானடா!
(பணம்)
கல்விக்குகூட
காசு கேட்குறான்!
கற்பதைகூட
காசா பாக்குறான்!
தாயும் சிலநாள்
சோறுபோடுவா!
காசு இல்லேனா
கூறுபோடுவா!
(பணம்)
பிறக்கவும்
இங்கே காசு
கேக்குறான்!
அட
பிணத்திலும்கூட
நெற்றி காசே
தேடுறான்!
கழிவினில் கூட
காசப்
பார்த்திட்டா
அட
கதறியே ஓடி
தேடி எடுக்கிறான்!
(பணம்)
காதலும்
இங்கே மாறி
போச்சுது!
காசு
செய்கின்ற
வேலையாச்சுது!
கற்பும்கூட
கனவா
போகுது!
காசு இருந்தா
மாசு
ஆக்குது!
(பணம்)
பண்பாடு
இங்கே
பரிதவிக்குது;
படைத்தவன்
மனமோ
துடிதுடிக்குது!
படைத்தவனோடு
போட்டி
போடுமோ!
கடவுளே;
உன்னை
அடிமையாக்கி
ஆட்டம் போடுமோ!
(பணம்)
கடவுளை
பார்க்கவும்
காசு கேட்கிறான்;
அட
கவலையை
மறக்கவும் காசு
கேட்கிறான்!
இதை
பார்த்து,பார்த்து
தினம்
சிரிக்கிறான்!
பரமன்;
பாரினில்
வந்தால் ;
அவனும் காசே
கடவுளாய்
உருகி
வேண்டுவான்!
(பணம்)
இது கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்.
No comments:
Post a Comment