Wednesday 19 April 2017

திரையரங்கம்

தாய்த்தமிழ் வணக்கம்
×××××××××××××××××××××
தாய்க்கும் - என்
தாய் கொடுத்த தமிழுக்கும்
முதன்மை வணக்கம்

கவிச்சர தலைமை வணக்கம்
×××××××××××××××××××××××××××××
கவிச்சர என் தலைமை கவிஞர்களுக்கு இந்த
கன்னி கவிஞன்
வணக்கங்களை தெரிவித்து கவிதொடுக்கிறேன்...

அவை வணக்கம்
××××××××××××××××××
கல்தோன்றா மண் தோன்றா
மூத்த குடிதமிழ் குடியான
என்
தமிழ் உறவுகளுக்கு என்
வணக்கங்கள்...

உபதலைப்பு
××××××××××××
திரையரங்கம்
×××××××××××××××

இருட்டறையில்
நானறியாமல்
சிரிக்கவும், அழுகவும்
விரும்பிச்சென்று...
திரையில் என்
தலைவனின் அறிமுகத்தில்
வாரி பூவீசி..
நிழலுடன் நிஜமாய்- நான் ஆடி
அவன் காதலை - என்
காதலாக்கி என்னவள் என்று
நான் ஆடிப்பாடி ஓய்ந்து
அமர்கையில்
சிறிய இடைவேளை அப்பொழுது
தான் உணர்ந்தேன் என்னருகில்
இருப்பவரையும் -இது
நிழல் என்பதையும்...
மீண்டும் ஒளி அணைக்கப்பட்டது
விழி விரியத்தொடங்கியது...
என் தலைவன்
சண்டையிடும் போது - உடன்
நானும் போராடினேன்...
சண்டையிட்டேன்...
இறுதியில்
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வி
தர்மம் நிலைநாட்டப்பட்டது...
ஒளி வந்த பிறகு தான்
புரிந்தது நிகழ்ந்தது
மாயையென்று...
வாழ்க்கையும் இதுதானா?
கருவறையிலிருந்து
வெளி வந்து
சிரித்து, மகிழ்ந்து, அழுது
தன்னருகில் இருப்பவர்
யார் என்று
உணராமல் கூட வாழ்ந்து
களைத்த பின்-தான்
உணர்கிறோம்....
எல்லாம் மாயையென்று....

இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்!

No comments:

Post a Comment

Popular Posts