Saturday 24 June 2017

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...

பராசக்தி (1952) சிவாஜி க‌ணேச‌ன், க‌லைஞ‌ர் கருணாநிதி
கூட்ட‌ணியில் ஒரு புதிய‌ திருப்புமுனையை
ப‌டைத்த‌ அருமையான‌ ப‌ட‌ம்.  அதில் இருந்து ஒரு பாடல்...
 
எழுதியவர் : உடுமலை நாராயண கவி

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே⁠⁠⁠⁠

2 comments:

  1. அருமையான கவிஞர். பணத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறார்! என்றும் நிலைக்கும் வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

      Delete

Popular Posts