Thursday 21 December 2017

நம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது

உலகின் மிகப்பெரிய சுவர் என்பது சீனப் பெருஞ்சுவர் அல்ல,
அது நல்ல இரு நண்பர்களுக்குள் உருவாகும் இடைவெளிதான்.

உலகின் மிகப்பெரிய வைரம் கல்லினன் வைரம் என்கிறார்கள்,
உண்மையில் அது அவரவர் குழந்தைகள் தான்.

உலகின் மிகப்பெரும் பாலைவனம் சஹாரா அல்ல,
அது சிறிதும் சிந்திக்காத மனிதனின் மூளைதான்.

உலகத்தின் உயரமான சிகரம் எவரெஸட் அல்ல,
உதவி நாடி வந்த ஒருவருக்கு ஓடிச் சென்று உதவியவரின் இதயம் தான்.




மிகப்பெரும் கிரகம் ஜூபிடர் என்கிறார்கள்,
உண்மையில் பெரிய கிரகம் முட்டாள்களைக்கூட வைத்துக்கொண்டு தொழில் செய்வதுதான்.

நம்பிக்கைத் துரோகத்தை எதிர்கொண்ட ஒரு மனதின் கொதிப்பை விடவா உலகத்தின் பெரிய எரிமலையான ஹவாயின் மவுனா லோ கொதித்து விடப்போகிறது ?

இந்தியாவின் சிரபுஞ்சிதான் உலகத்தில் அதிகமாக மழை பொழியும் இடமாம்,
பொருட்கள் வாங்கித் தரச் சொல்லும் குழந்தைகளின் கண்களை
அவர்கள் பார்த்ததில்லை போலும்.

கம்போடியாவின் அங்கோர் வாட் தான் இன்றளவில்
உலகத்தின் மிகப்பெரும் கோயிலாம்,
ஒரு சந்தோசமான குடும்பம் வாழும் வீட்டை விடவா
அது பெரிய கோயில் ?

உலகத்தின் மிகப்பெரிய நிலவாழ் மிருகம் ஆப்பிரிக்க யானை என்று சொல்பவர்களே,
குடித்திருக்கும் ஒரு சாதாரண மனிதனை விடவா மூர்க்கமானது அது ?

உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகம் லண்டனில் இருக்கிறதாம்,
அட குழந்தைகள் விளையாடி கலைக்கப்படாத வீடுகள் தானே
உலகின் பெரிய அருங்காட்சியகம்.

மனிதனின் எண்ணங்களின் ஓட்டத்தை விட உலகில் எந்த ரயிலாலும் விமானத்தாலும் வேகமாகச் சென்று விட முடியாது.

இப்படியாக, உலகத்தின் பெரியதும் சிறியதும் நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும்தான் இருக்கின்றன. உலகத்தின் வலியதும் எளியதும் நம்மைச் சார்ந்தே கிடக்கின்றன...

#வாழ்க_வளமுடன்

No comments:

Post a Comment

Popular Posts