என்னென்று
பிறப்பெடுத்தேன்!
உள்ளத்தில்
எவ்வளவோ
ஆசைகொண்டேன்!
எனக்கென்று
நன்மையில்லை....
என்றேயென்னை
படைத்துவிட்டான்!
கனவென்று
எவ்வளவோ
கடுகளவும்-
கை கூடவில்லை,
மண்ணென்ற
பூமிதனில்
மனம்மட்டும்
ஏக்கம் கொள்ள!
ஓரடி நானேற;
ஓரடி தான் சேர்த்து
ஏழடியாய் தடுமாற!
எத்தனை எத்தனை
துன்பமதை
அத்தனையும் நான்
தாங்க!
அடுத்தடுத்து
எனை அழுத்த....
நான் விழுந்து
புதைவேனோ-இல்லை
நிலமதனில்
விதையெனவே
துளிர்வேனோ!.......?
இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்!
பிறப்பெடுத்தேன்!
உள்ளத்தில்
எவ்வளவோ
ஆசைகொண்டேன்!
எனக்கென்று
நன்மையில்லை....
என்றேயென்னை
படைத்துவிட்டான்!
கனவென்று
எவ்வளவோ
கடுகளவும்-
கை கூடவில்லை,
மண்ணென்ற
பூமிதனில்
மனம்மட்டும்
ஏக்கம் கொள்ள!
ஓரடி நானேற;
ஓரடி தான் சேர்த்து
ஏழடியாய் தடுமாற!
எத்தனை எத்தனை
துன்பமதை
அத்தனையும் நான்
தாங்க!
அடுத்தடுத்து
எனை அழுத்த....
நான் விழுந்து
புதைவேனோ-இல்லை
நிலமதனில்
விதையெனவே
துளிர்வேனோ!.......?
இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்!