அதிகாரம் 66
வினைத்தூய்மை
******
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்
(குறள் 651)
******
நற்றுணையும்
நற்செயலும்!
***
அறிவினில்
உயர்ந்தோர் தன்னை
அலசிநாம்
தேர்வு செய்து
நட்பதாய்க்
கொண்டு வாழ்ந்தால்
நமக்கென்றும்
குறையே இல்லை,
என்னுடை
வாழ்க்கை தன்னில்
இருபெரும்
நண்பர் வாய்த்தார்
சுப வீர
பாண்டி நட்பும்
கவிச்சுடர்
பித்தன் நட்பும்
இருவரின்
துணையி னாலே
இன்றுநான்
வெளியில் வந்தேன்
எனக்குள்ள
ஆற்றல் சேர்த்து
இயன்றதைச்
செய்யக் கற்றேன்,
நல்லதோர்
துணையி னோடு
நாமுமே
முயற்சி செய்தால்
முடியாத
செயலைக் கூட
முடித்துநாம்
வெற்றி காண்போம்,
வினையெனில்
செயல தாகும்
துணையெனில்
நல்ல நட்பாம்
இரண்டும்நம்
வாழ்வில் சேர்ந்தால்
எதிலுமே
வெற்றி யென்றான்!
*****
ஆக்கம் - வெற்றி, உயர்வு.
வினைநலம் - நற்செயல்.
*****
மானம்பாடி புண்ணியமூர்த்தி ,
22.02.2018.
#073
2018/03/04
கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!
https://www.sigaram.co/preview.php?n_id=299&code=uifxqTC3
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
-
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீ...
-
உழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...
-
தமிழில் இன்று ஐந்து, ஐயா, ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் 'ஐ' என்ற எழுத்து ஒரு காலத்தில் 'ஐ' என்ற சொல்லாகத் தனித்து நின்...
-
அதிகாரம் 43 - அறிவுடைமை ******* அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்க லாகா அரண்...
-
மனநல மருத்துவமனை: நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.. மருத்துவர் : அப்படியா? எங்க அந்தக் கதைய சொல்லு... ...
-
அப்பொழுதுதான் வந்து சேர்ந்திருந்த மின்னஞ்சலையே பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அந்த மின்னஞ்சலைப் படிக்கப் படிக்க அவனது முகத்தில் மகிழ்ச...
-
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்...
-
என்னென்று பிறப்பெடுத்தேன்! உள்ளத்தில் எவ்வளவோ ஆசைகொண்டேன்! எனக்கென்று நன்மையில்லை.... என்றேயென்னை படைத்துவிட்டான்! கனவென்ற...
-
ஆவாரை, பூலைப்பூவோடு, பாளையும், வேம்போடு காப்புக்கட்டி, வீடுவாசல் அலங்கரித்து பழமையினை அழித்தொழிக்கும் போகியாம்! தைமகளே வா! வா!! தமிழனி...

No comments:
Post a Comment