அதிகாரம் 66
வினைத்தூய்மை
******
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்
(குறள் 651)
******
நற்றுணையும்
நற்செயலும்!
***
அறிவினில்
உயர்ந்தோர் தன்னை
அலசிநாம்
தேர்வு செய்து
நட்பதாய்க்
கொண்டு வாழ்ந்தால்
நமக்கென்றும்
குறையே இல்லை,
என்னுடை
வாழ்க்கை தன்னில்
இருபெரும்
நண்பர் வாய்த்தார்
சுப வீர
பாண்டி நட்பும்
கவிச்சுடர்
பித்தன் நட்பும்
இருவரின்
துணையி னாலே
இன்றுநான்
வெளியில் வந்தேன்
எனக்குள்ள
ஆற்றல் சேர்த்து
இயன்றதைச்
செய்யக் கற்றேன்,
நல்லதோர்
துணையி னோடு
நாமுமே
முயற்சி செய்தால்
முடியாத
செயலைக் கூட
முடித்துநாம்
வெற்றி காண்போம்,
வினையெனில்
செயல தாகும்
துணையெனில்
நல்ல நட்பாம்
இரண்டும்நம்
வாழ்வில் சேர்ந்தால்
எதிலுமே
வெற்றி யென்றான்!
*****
ஆக்கம் - வெற்றி, உயர்வு.
வினைநலம் - நற்செயல்.
*****
மானம்பாடி புண்ணியமூர்த்தி ,
22.02.2018.
#073
2018/03/04
கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!
https://www.sigaram.co/preview.php?n_id=299&code=uifxqTC3
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
-
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீ...
-
01 ஆறுதலுக்காகத்தான் தோள்சாய்கிறேன்! ஆதாயத்திற்கென நினைத்துக்கொள்கிறது இந்த உலகம்! 02 பைத்தியமாவதைவிட, பேரானந்தம் வேறென்ன இருந்துவ...
-
வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படி...
-
தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிகரம் இணையத்தளத்தின் சிறப்பு நேர்காணல்: ஆண்டு விழா நாள் : 28.12.2017 நேர்...
-
தாய் வழியே தங்கையாய் வந்தவளே... தமையன் எழுதுகிறேன் தங்கைக்கோர் கவிதையை... ஐயிறு திங்கள் எனைத் தாங்கிய மடி உனைத் தாங்கிட... ஓராயிரம்...
-
மனநல மருத்துவமனை: நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.. மருத்துவர் : அப்படியா? எங்க அந்தக் கதைய சொல்லு... ...
-
வணக்கம் 'சிகரம்' வாசகர்களே! உங்கள் அனைவரையும் இன்னுமோர் ஆண்டுவிழா தருணத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2006.06.01 அன்று...
-
தமிழில் இன்று ஐந்து, ஐயா, ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் 'ஐ' என்ற எழுத்து ஒரு காலத்தில் 'ஐ' என்ற சொல்லாகத் தனித்து நின்...
-
பூஞ்சோலை சிரித்திருந்த புழலோரம் ,,,, இன்று புதர்க் காடாய் மாறிவிட்ட கோலம் ! பூஞ்சோலைக் கருகிருந்த குடிலிதுதான் ! இதில்தான் ...
No comments:
Post a Comment