அதிகாரம் 66
வினைத்தூய்மை
******
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்
(குறள் 651)
******
நற்றுணையும்
நற்செயலும்!
***
அறிவினில்
உயர்ந்தோர் தன்னை
அலசிநாம்
தேர்வு செய்து
நட்பதாய்க்
கொண்டு வாழ்ந்தால்
நமக்கென்றும்
குறையே இல்லை,
என்னுடை
வாழ்க்கை தன்னில்
இருபெரும்
நண்பர் வாய்த்தார்
சுப வீர
பாண்டி நட்பும்
கவிச்சுடர்
பித்தன் நட்பும்
இருவரின்
துணையி னாலே
இன்றுநான்
வெளியில் வந்தேன்
எனக்குள்ள
ஆற்றல் சேர்த்து
இயன்றதைச்
செய்யக் கற்றேன்,
நல்லதோர்
துணையி னோடு
நாமுமே
முயற்சி செய்தால்
முடியாத
செயலைக் கூட
முடித்துநாம்
வெற்றி காண்போம்,
வினையெனில்
செயல தாகும்
துணையெனில்
நல்ல நட்பாம்
இரண்டும்நம்
வாழ்வில் சேர்ந்தால்
எதிலுமே
வெற்றி யென்றான்!
*****
ஆக்கம் - வெற்றி, உயர்வு.
வினைநலம் - நற்செயல்.
*****
மானம்பாடி புண்ணியமூர்த்தி ,
22.02.2018.
#073
2018/03/04
கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!
https://www.sigaram.co/preview.php?n_id=299&code=uifxqTC3
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
-
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீ...
-
தாய் வழியே தங்கையாய் வந்தவளே... தமையன் எழுதுகிறேன் தங்கைக்கோர் கவிதையை... ஐயிறு திங்கள் எனைத் தாங்கிய மடி உனைத் தாங்கிட... ஓராயிரம்...
-
சங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...
-
தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிகரம் இணையத்தளத்தின் சிறப்பு நேர்காணல்: ஆண்டு விழா நாள் : 28.12.2017 நேர்...
-
வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படி...
-
அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து குறள் 01 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ஒருவரி குறள் விளக்கம் : அகரம்...
-
உலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...
-
புலர்ந்திடும் பொழுதில் புலன்பெயராதவள் நினைவுகள் மார்துளைத்த ஈட்டியாய் மனதை வதைக்கிறது நாளும் சாகிறேன் நாட்காட்டியாய் கிழிகிறேன் கரைச...
-
உழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...
No comments:
Post a Comment