அதிகாரம் 66
வினைத்தூய்மை
******
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்
(குறள் 651)
******
நற்றுணையும்
நற்செயலும்!
***
அறிவினில்
உயர்ந்தோர் தன்னை
அலசிநாம்
தேர்வு செய்து
நட்பதாய்க்
கொண்டு வாழ்ந்தால்
நமக்கென்றும்
குறையே இல்லை,
என்னுடை
வாழ்க்கை தன்னில்
இருபெரும்
நண்பர் வாய்த்தார்
சுப வீர
பாண்டி நட்பும்
கவிச்சுடர்
பித்தன் நட்பும்
இருவரின்
துணையி னாலே
இன்றுநான்
வெளியில் வந்தேன்
எனக்குள்ள
ஆற்றல் சேர்த்து
இயன்றதைச்
செய்யக் கற்றேன்,
நல்லதோர்
துணையி னோடு
நாமுமே
முயற்சி செய்தால்
முடியாத
செயலைக் கூட
முடித்துநாம்
வெற்றி காண்போம்,
வினையெனில்
செயல தாகும்
துணையெனில்
நல்ல நட்பாம்
இரண்டும்நம்
வாழ்வில் சேர்ந்தால்
எதிலுமே
வெற்றி யென்றான்!
*****
ஆக்கம் - வெற்றி, உயர்வு.
வினைநலம் - நற்செயல்.
*****
மானம்பாடி புண்ணியமூர்த்தி ,
22.02.2018.
#073
2018/03/04
கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!
https://www.sigaram.co/preview.php?n_id=299&code=uifxqTC3
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
-
அதிகாரம் 43 - அறிவுடைமை ******* அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்க லாகா அரண்...
-
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்...
-
அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி இன்னும் விடை தெரியாமல் மண்டையை சொறியும் முக்கியமான ஒரு புதிர் மரணம். ஆமாம்... உண்மையில் மரணம் என்பதை மருத்...
-
தமிழ் வணக்கம் இயலிசை நாடக கலை வளர்த்த கடம்ப வனமதிலே! தொல்காப்பியனின் இலக்கணமாய், வள்ளுவனின் வான்மறையாய், நான்மறையின் நாயகியாய், பழமை...
-
கூகிள் தற்போது தமிழ் மொழிக்கான ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் தமிழ் மொழியிலான தேடல், தமிழ்த் தட்டச்சு, பிளாக்கர் தமிழ், த...
-
தமிழில் இன்று ஐந்து, ஐயா, ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் 'ஐ' என்ற எழுத்து ஒரு காலத்தில் 'ஐ' என்ற சொல்லாகத் தனித்து நின்...
-
திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கு...
-
மலையக இலக்கிய ஆளுமைகள் குறித்துப் பேசும்போது 'சாரல் நாடன்' தவிர்க்கப்பட முடியாதவர். 'சாரல் நாடன்' இலங்கை, நுவரெலியா மாவட...
-
மனநல மருத்துவமனை: நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.. மருத்துவர் : அப்படியா? எங்க அந்தக் கதைய சொல்லு... ...

No comments:
Post a Comment